“ஆமா.. பழிக்குப் பழி தான் வாங்குறேன்”.. பப்ளிக்காக உண்மையை ஒப்புக் கொண்ட ’கொழந்தப்புள்ள’!
ஜனனியை பழிக்குப் பழி வாங்குவதாக ஐஸ்வர்யா கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: பிக் பாஸ் வீட்டின் இந்த வார தலைவியாக உள்ள ஐஸ்வர்யா தத்தா, ஏறக்குறைய சர்வாதிகாரியாக நடந்து வருகிறார்.
கடந்த வார இறுதியில் நடத்தப்பட்ட போட்டியின் மூலம் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவியாகியுள்ளார் ஐஸ்வர்யா தத்தா. அதன் தொடர்ச்சியாக வீட்டில் உள்ள போட்டியாளர்களை சமையலுக்கு, பாத்திரம் கழுவ மற்றும் கழிப்பறை தூய்மைப் படுத்த என மூன்று குழுக்களை அவர் பிரித்தார்.
இதில் மும்தாஜுக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
டாஸ்க் இல்லை:
அதனைத் தொடர்ந்து டாஸ்க்குகள் ஏதும் இல்லாததால், அனைவரும் அமர்ந்து முந்தைய வாரங்களில் நடந்த சம்பவங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது புறணி பேசுபவர்கள் குறித்து மாறிய பேச்சு, பின்னர் வாக்குவாதம் ஆனது.
பகலில் உறக்கம்:
ஐஸ்வர்யாவும், பாலாஜியும் இது குறித்து காரசாரமாகப் பேசினர். பின்னர் பிக் பாஸ் வீட்டில் ஜனனி, சாரிக் மற்றும் யாஷிகா ஆகியோர் உடல் நலக் குறைவாக இருப்பதாகவும், அதனால் அவர்கள் பகலில் சிறிது நேரம் உறங்குவது குறித்தும் பேச்சு திரும்பியது.
யாஷிகா விவகாரம்:
ஆனால், அதற்கு அனுமதி இல்லை என தலைவி ஐஸ்வர்யா வாதம் செய்தார். அதோடு ஜனனி முதல் வாரம் தலைவியாக இருந்தபோது, உடல்நலமில்லாமல் இருந்த யாஷிகாவிற்கு இரக்கம் காட்டவில்லை என்றும் வாதிட்டார்.
ஜனனி விளக்கம்:
ஆனால், அப்போது வீட்டிற்கு அனைவரும் புதியவர்கள் என்பதால் தனக்கு விதிமுறைகள் சரிவரத் தெரியவில்லை என தன் பக்க நியாயத்தை எடுத்துரைத்தார் ஜனனி. ஆனாலும் தன் பிடியில் இருந்து இறங்கி வர ஐஸ்வர்யா மறுத்தார்.
ஒப்புக் கொண்ட ஐஸ்:
இதனால், ‘அப்போது நடந்ததற்கு இப்போது பழிக்குப் பழி வாங்குகிறாயா?' என பாலாஜி கேள்வி எழுப்பினார். அதற்கு ஐஸ்வர்யா, ‘ஆமாம் பழி தான் வாங்குகிறேன்' என குழந்தைத்தனமாக ஒப்புக் கொண்டார். பின்னர் ஒரு வழியாக உடல்நலக் குறைவானவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுக்கட்டும், நாய் குரைத்தால் பிறகு எழுப்பி விடலாம் என அனைவரும் ஒருமனதாக ஒப்புக் கொண்டனர்.