Bigg Boss 3 Tamil: கண்ட பலன் ஒன்றும் இல்லை.. கற்ற பாடமும் ஒன்றுமில்லை!
Recommended Video
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி சூப்பர் ஹிட் ஷோ. அந்த நேரத்தில் மற்ற சேனல்கள் தங்களது வியூவர்ஸை தக்க வச்சுக்க பல்வேறு யுக்திகளை கையாண்டும், பிக் பாஸ் ரேட்டிங் குறையவில்லை.
இப்படி நிலைமை இருக்க, பிக் பாஸ் 3 வது சீசன் இழுத்துக்க பறிச்சுக்கன்னுதான் இருக்குது. திடீர்னு சூடு பிடிக்குது. திடீர்னு அடங்கிருது. சுவாரஸ்யமான டாஸ்க் இல்லை என்று வியூவர்ஸ் குறை கூறுகிறார்கள்.
அதோடு, கமல் இன்னிக்கு பட்டையை கிளம்புவார் என்று எதிர்பார்த்து கொண்டு இருப்போம்.. அன்னிக்கு கமல் எதுவும் பேசாமாட்டார். இதுதான் எல்லை என்று ஒதுங்கிக் கொள்கிறார் போலும்!
கற்ற பாடம்
கவினுக்கு எல்லா விதமான பொழுது போக்கும் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கின்றது. சாண்டி தாளம் போட்டு பாட்டை ஆரம்பித்து விட்டால், பாத்ரூம் ஏரியா கிடுகிடுக்கும். ஆனால், இதெல்லாம் இப்போது இல்லை. காரணம் கவின் லாஸுடன் நேரத்தை கழித்தார். சாக்ஷி பிரச்சனையில் அவ்வளவு சிக்கி, கண்ணீர் விட்டு கதறி அழுதும் கவின் கண்ட பலன் ஒன்றும் இல்லை. கற்ற பாடமும் ஒன்றுமில்லை.
Thirumanam Serial: பொண்டாட்டிகிட்டேயே உன் புருஷனை தாலி கட்ட சொல்லுன்னு சொல்றாளே சக்தி!
வாய்ப்பு சாண்டி
கவினை திசை திருப்பி தன்பக்கம் இழுக்க நல்ல வாய்ப்பு இருந்தும், சாண்டி அதை செய்யவில்லை. இப்போது கவினை ஓபன் நாமினேட் செய்துவிட்டு, பின்னர் அழுவது, சும்மா என்பது போலாகிவிட்டது. நண்பன் என்று சொல்லிக் கொண்டு, இதை கூட செய்யத் தவறி விட்டார் சாண்டி. அப்படி பார்க்கையில் பிக் பாஸ் இல்லத்தில் சாண்டி ஒரு யுக்தியை கையாண்டு விளையாடுவது போலத்தான் தோன்றுகிறது.
ஷெரீன் சாக்ஷி
சாக்ஷி கவின் மீது கொண்ட காதல், பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிளவால் அவ்வப்போது அழும்போது, அவரது மனதை மாற்றி இதமாக அவருக்கு ஆறுதல் சொல்லி, தேற்றியது தோழி ஷெரீன்.இப்படிப்பட்ட பக்குவம் சாண்டிக்கு வராமல் போனது எதனால்? எப்போதும் ஒன்றாக இருக்கும் நான்கு நண்பர்கள் இப்போது அப்படி இல்லை.
ஸ்டடி ரெடி
இப்போது இருக்கும் ஹவுஸ் மேட்ஸ் எட்டு பேரும் போட்டிக்குத் தயாராகி உள்ளனர் என்றுதான் நேற்று நடந்த விஷயம் உணர்த்துகிறது. இதில் கவின் எப்போதும் சோம்பேறியாக படுத்து கிடப்பது , உட்கார்ந்து இருப்பது என்று ஒரு சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கிறார். ஒருவேளை நண்பனை ஜெயிக்க வைக்கும் யுத்தியாக இது இருக்கலாம் என்று பேச்சு எழுந்துள்ளது.