Bigg Boss 3 Tamil: கவின் கேட்டது நியாயம்.. கேட்ட ஆள்தான் தவறு!
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோ சீசன் 3 யை நாறடித்து விட்டார்கள் ஹவுஸ் மேட்ஸ் என்றுதான் சொல்ல வேண்டும். யாருக்கும் பயமில்லாமல் தெளிவாகச் சொல்லலாம் சீசன் 3 போரோபோர்!
கமல்ஹாசன் ஏன் இப்படி மாறிவிட்டார். ஒப்பந்தமே அப்படிப் போட்டதுதானா? தவறை சுட்டிக் காட்டி மட்டும்ப் பேசுங்கள் தட்டிக் கேட்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை என்று கூறிவிட்டார்களோ.
கமலின் கெத்தே தவறை தட்டிக் கேட்பதுதான், அந்த சுத்த தமிழ் வீரனின் கைகளையும் வாயையும் கட்டிப்போட்டது போன்ற ஒரு நிகழ்ச்சி எங்களுக்கு தேவையில்லை சார்னு அவரது ரசிகர்கள் கொந்தளித்து எழுவது பிக் பாஸ் உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா?
Roja Serial: பசும்பாலுடன் வரும் ரோஜாவை பார்த்ததும் அர்ஜுனுக்கு பொங்கி வருது கவித..கவித!
சேரன் கமல்ஹாசன்
பிக் பாஸ் ஹவுசில அனைவரும் சமம், நான் டைரக்டர், நான் ஆர்ட்டிஸ்ட் என்கிற பாதுபாடோ, ஈகோவோ இருக்க கூடாது என்று கமல்ஹாசன் சொல்லி இருந்தார். ஆனால், சாண்டியும், கவினும் இவரை சேரப்பா நீ பேசினால் கொஞ்சம் போரப்பா என்று கானா புனைந்து பாடியபோது வருத்தம் அடைந்தார் சேரன்.
கவினுடன் சேரன்
மறுநாள் சான்டி ,கவினுடன் பேசி, தான எவ்வளவு பெரிய இயக்குநர்.. எல்லாரையும் போல என்னை இப்படி கலாய்ப்பது எனக்கு பிடிக்கலை என்பது போல சொன்னார்.இருவருமே சேரனிடம் மன்னிப்பு கேட்டனர்.ஆனால், இவர் தான் பெரிய இயக்குநர் என்று இருவரிடம் தன் பெருமைகளை பேசியது பிக் பாஸ் ஹவுசிங் ரூல்படி தவறு. இந்த தவறை கமல்ஹாசன் சுட்டிக் காட்டியய போதும், சேரன் சாண்டி,கவினுடன் இது பற்றி பேசி வருத்தம் தெரிவிக்கவில்லை.
கவின் சாண்டி
இந்த கோவத்தில் சாண்டியும், கவினும் இருக்கிறார்கள். சித்தப்பு ஒரு இயக்குநரை தவறாகப்பேசிவிட்டோம் என்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.ஆனால், ஒரு சதவிகிதம் கூட அந்த உணர்வு இவருக்கு இல்லையே என்று சாண்டி கூறுகிறார்.கவின் இந்த விஷயத்தை லாஸிடம் சொல்லி வருத்தப்படுகிறார்.
சகிச்சுக்க முடியலை
இப்படிப்பட்ட ஒருத்தர் உன்னனிடம் டிராமா போடுவதை என்னால் சகிச்சுக்க முடியலை. உன் தரப்பில் உனக்கு நியாயம் கிடைச்சுருச்சுன்னா விட்டுடு.எங்களுக்கு கிடைக்கலை.அப்புறம் உன் இஷ்டம் என்பது போல கவின் முகத்தை திருப்பிக்கறார்.லாஸ் அப்படியா என்று கோபத்துடன் முகத்தை வச்சுக்கிட்டு இடத்தை விட்டு நகர்கிறார்.
இருந்தாலும், இரவு விளக்கை அணைத்தவுடன் இருவரும் தனித்து பேசிக்கொண்டு இருப்பதை சாண்டி கண்டிக்கிறார்.இது பொறுப்புள்ள பிள்ளைக்கு அடையாளம்.