தம்பிக்கு பார்த்த பொண்ணு அண்ணன்கிட்ட லவ்வை சொல்றா... என்னாங்கடா இது... தலை சுத்துது!
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணமம்மா சீரியல் எல்லா சீரியலைவிடவும் கொஞ்சம் வேகமா போற மாதிரி இருக்கு. விஜய், ஜீ தமிழ் ரெண்டு டிவியிலயும் அடுப்பை பத்த வைக்கற ஷாட் எடுத்தாங்கன்னா, ஹீரோயின் மெல்ல தீ பெட்டியை எடுப்பாங்க..
அப்புறம் பெட்டியிலிருந்து ஒரு தீ குச்சியை எடுப்பாங்க..பிறகு குச்சியை உரசுவாங்க.அதை கொண்டு போய் அடுப்புல கேஸ் பாட்டனைத் திறந்து அடுப்பை பத்த வைப்பாங்க. நிஜமா அவ்ளோ ஸ்லோவா சீன்கள் நகரும்.
இதுக்கு விதிவிலக்கா இருக்கு விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா. சன் டிவி, கலர்ஸ் தமிழ் டிவி மாதிரி கொஞ்சம் வேகமாவே காட்சிகள் நகருது.இயக்குநருக்கு ஒரு பாராட்டு சொல்லலாம்.
சந்திரா இன்னும் வரல.. குமாரி மட்டும்தான்... எப்படிங்க... வேணும்னே தொலைச்சிட்டீங்களா?
அஞ்சலி
பாரதியின் தம்பி அகிலனுக்கு, ஏழை வீட்டு பெண் அஞ்சலி அழகா இருக்கான்னு அவ மேல காதல் வந்துருது. அம்மாவிடம் சொல்ல, பெண் சிவப்பா அழகாகான்னு அம்மாவும் ஒத்துக்கறாங்க. அஞ்சலி ரெண்டாம் தாரத்து பொண்ணு, கண்ணம்மா முதலாம் தாரத்து பொண்ணு. கேட்கணுமா, கண்ணம்மா அந்த வீட்டில் வேலைக்காரி மாதிரி இருக்கா.
வீடு
அஞ்சசலியின் வரும்கால மாமியார் அஞ்சலிக்கு பரிசா ஒரு வீடு தர்றாங்க. அந்த வீட்டுல மொத்த குடும்பமும் குடியேறுது.அந்த வீட்டுக்கு அஞ்சலியின் வரும் கால மாமியார் வர. வீட்டை துடைச்சுக்கிட்டு இருந்த கண்ணம்மாவுக்கும், தங்கையின் மாமியாருக்கும் வாக்குவாதம் வந்துடுது.
இவ்ளோ கறுப்பாவா
அந்த எஜமானி அம்மாவுக்கு கறுப்புன்னாலே பிடிக்காது. தன் பேத்தி கருப்புண்ணே இன்னும் அவளை கிட்டத்துல சேர்க்கலை. கண்ணம்மாவை இந்த வீட்டு ட்டு வேலைக்காரின்னு அறிமுகப்படுத்தி வைக்கறாங்க சித்தி, இவ்ளோ கறுப்பாவான்னு முகம் சுளிக்கறா எஜமானி..
மெடிக்கல் கேம்ப்
இதுக்கு நடுவுல கண்தானம், ரத்த தானம் செய்வதை வலியுறுத்தி அகிலனின் அண்ணன் பாரதி அங்கே மெடிக்கல் கேம்ப் போடறான். அப்போ, கண்ணாம்மாவை பார்த்த பாரதி அவளை ரசிக்கறான். என்னங்க இங்கேன்னு கேட்கறான்.. என் கண்களையும் தானம் செய்ய போறேன்னு சொல்றான் பாரதி.
ரொம்ப அழகு
உங்க கண்ணு ரொம்ப அழகா இருக்குங்க...இந்த கண்ணை தானமா செய்ய போறேன்னு சொல்றான்.நிஜமாவா சொல்றீங்க... என் கண்ணு அவ்ளோ அழகா இருக்கா. இதுவரைக்கும் என்கிட்ட இப்படி யாரும் சொன்னதில்லைங்க. அவ்வளவு என் நானே கூட என் கண்ணு அழகான்னு பார்த்ததில்லைன்னு சொல்றா. இப்படி இருவருக்கும் அறிமுகம்.
அஞ்சலி வீட்டுக்கு
பாரதி அஞ்சலி வீட்டுக்கு போறான், அங்கு கண்ணம்மாவைப் பார்த்த பாரதி, நீங்க என்னங்க இங்கேன்னு கேட்கறான். நான் இந்த வீட்டு வேலைக்காரின்னு சித்தி வரதைப் பார்த்துட்டு சொல்றா. அவன் கண் கண்ணம்மாவையே பார்த்துகிட்டு இருக்க, கண்ணம்மா பாரதியைப் பார்க்கறா.
ஸ்வேதா நிச்சயம்
வாங்க மாப்பிள்ளை.. என்ன இவ்ளோ தூரம் சொல்லிவிட்டடா நாங்களே வந்திருப்போமேன்னு சொல்றாங்க ஸ்வேதா சித்தி. இல்லை ஒரு பிரச்சனை..அத்தான்னு இழுக்கறான். அதுக்குள்ளே, என் பொண்ணு ஸ்வேதா ரொம்ப நல்ல பொண்ணு, உங்க குடும்பத்தை தன குடும்பம் போல பார்த்துப்பா, குனிஞ்ச தலை நிமிர மாட்டான்னு சொல்ல, அடுத்த வாரமே நிச்சயம் வச்சுக்கலாம்னு அம்மா சொலல் சொன்னாங்க ...அதான் சொல்லிட்டு போலாம்னு வந்தேன்னு சொல்றான் பாரதி.
காதலிப்பதாக
இதற்கு நடுவில் ஸ்வேதா, பாரதி உங்களைத்தான் நான் காதலிக்கறேன், உங்களைத்தான் கல்யாணம் செய்துக்குவேன்னு சவால் விட்டுட்டு போறா. அதுக்குள்ளேதான் பாரதி இந்த முடிவை சொல்றான். ஸ்வேதா, அகிலனை அழைச்சுக்கிட்டு ரெஸ்ட்டாரெண்ட் போயிருப்பது தெரிஞ்சவுடன் அங்கு சென்று, டேய் சும்மா விளையாட்டுக்கு உங்க அண்ணனை காதலிக்கறேன்னு சொல்லி வெறுப்பேத்துவா நம்பாதேன்னு சொல்லறான் பாரதி. தம்பி சிரிக்க, ஸ்வேதா பற்களைக் கடிக்கிறாள்.