Pandian Stores Serial: கடையிலும் ரொமான்ஸ் பண்ணலாம்... கூட தம்பி இருக்க கூடாது!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இரண்டாவது தம்பி கதிரும், அவனின் புது மனைவி முல்லையும் சந்தோஷமாக சேர்ந்து வாழ்வதைப் பார்க்க குடும்பமே ஆவலா இருக்கிறார்கள்.
மூத்த அண்ணன்தான் கடையை பொறுப்பாக இருந்து பார்த்துக் கொள்பவர்.பாண்டியன் ஸ்டோர்ஸ் என்றால் அந்த ஊரில் அவ்வளவு மதிப்பு. தரமான மளிகை சாமான்களை கொடுப்பவர்கள் என்கிற பெயரெடுத்த கடை..
இரண்டாவது முதல் தம்பிக்கு முல்லையை பேசி முடித்திருக்கும் நிலையில்,அவன் மீனாவை காதலிச்சு கல்யாணமும் செய்துக்கறான். இதனால், முல்லையை கதிருக்கு மணமுடிக்க வேண்டியதாகி விடுகிறது.
கோயிலுக்கு போக
வீட்டில் கதிருக்கு தெரியாமல் முல்லையையும், முல்லைக்குத் தெரியாமல் ககதிரையும் தனியாக விட்டுட்டு போனால், ரெண்டு பேரும் ஒண்ணு சேர வாய்ப்புள்ளதுன்னு நினைச்சு தனியா விட்டுட்டு போனால், இங்கே ஒரே களேபரமா கிடக்குது. அந்த அளவுக்கு கல்யாணத்துக்கு முன்னாலிருந்தே ஆகாது. இவங்களுக்கு தப்பா கல்யாணம் பண்ணி வச்சுட்டோமேன்னு வீட்டில் எல்லாரும் வருத்தப்படறாங்க.
ஜீவா ஹனிமூன்
ஜீவாவும், மீனாவும் ஹனிமூன் போகலாம்னு திட்டம் போட, வீட்டில் எல்லோரும் போயிட்டு வாங்க நான் கடையை பார்த்துக்கறேன்னு பெரிய அண்ணன் அனுப்பி வைக்கிறார். இதில் மனைவி தனமும், கல்யாணமாகாத தம்பி கண்ணனும் சேர்ந்துகொள்ள மீனாவுக்கு எரிச்சல் ஆகிறது. இருந்தாலும் ஜீவாவும், மீனாவும் மட்டும் டிரிப்பை என்ஜாய் பண்ண,தனம்,கண்ணன் வேடிக்கை பார்த்துகிட்டு பொழுதை கழிக்கிறார்கள்.
ஒருவர் மீது
இந்த சமயத்தில்தான் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பை கதிரும், முல்லையும் புரிந்துகொள்கிறார்கள்.என்றாலும் நெருக்கமாக இருக்க கூச்சமாக இருக்கிறது. இப்படிப்பட்ட நேரத்தில் தம்பதி நெருங்கும் படியாக வண்டி ஓட்ட கற்றுத் தருவது என்று நல்ல விஷயங்கல் நடப்பது குடும்பத்துக்கே சந்தோஷமாக இருக்கிறது.
முல்லை கதிர்
முல்லை வேணும்னே பலகாரம் செய்தோம், அதை கடையில் கொண்டு வந்து குடுத்துட்டு போலாம்னு வந்தேன்னு கதிரைப் பார்க்க வந்த முல்லை சொல்ல, சரி சரி..சொல்லி இருந்தா இந்த பயலை அனுப்பி இருப்பேனேன்னு மூத்தார் சொல்ல, இல்லை மாமா என் ஜாக்கெட்டை தைக்க கொடுத்திருந்தேன், அதை வாங்க வர்றப்போ, இதை கொடுத்திட்டு போலாமேன்னு வந்தேன்னு சொல்றா.
கொஞ்சம் உதவியா
புரிந்துக்கொண்ட அண்ணன் நாங்க கொஞ்சம் வெளியில போயிட்டு வரோம்.முல்லை கதிருக்கு கொஞ்சம் உதவியா இருப்பான்னு சொல்லிட்டு போறாங்க..கண்ணன் மட்டும் நகராமல் இருக்க டேய்.. உனக்குத் தாண்டா போன் வந்திருக்கு., உன் ஃபிரண்ட் கோயிலுக்கு பக்கத்திலே இருக்கானாம். போன்னு சொல்லி அனுப்பிட்டு, இருவரும் ஆசையா பார்த்துக்கறாங்க.. பணத்தை கை தொட்டு வாங்கி கல்லாவில் போடறாங்க. விரலைப் பிடிச்சு தடவிக்கறாங்க...
ரோமான்ஸ் பண்ண எந்த இடமா இருந்தாலென்ன... நல்லா பண்ணலாமே!