பெண்களுக்கு காம்ப்ரமைஸ் செய்துக்க முடியாதா?
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் கதை திருப்பு முனையா போகுது. கதை நல்லாவும் இருக்கு.
பாரதி திடீர்னு கருப்பு கண்ணம்மாவை கல்யாணம் செய்துகிட்டு வந்துடறான்.கருப்பே பிடிக்காத சவுந்தர்யா அம்மாவுக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை.
அகிலனுக்கு நிச்சயம் செய்திருந்த கண்ணம்மாவின் தங்கச்சி அஞ்சலி கல்யாணம் நடக்காதுன்னும் சொல்லிடறாங்க. அஞ்சலிக்கு கடைசி நேரத்தில் எப்படியாவது தம்பி அகிலனை விட்டு, அண்ணன் பாரதியை கல்யாணம் செய்துக்கணும்னு ஆசை....இப்போ இடிஞ்சு போயிடறா.
ரோஜா வேஷம் வெளுத்து... இப்போ ராஜா வேஷமும்...!
கண்ணம்மா பாரதி
பாரதி கண்ணம்மாவை கல்யாணம் செய்துக்கிட்டதில் கோவமான சவுந்தர்யா அம்மா, இருவரையும் வீட்டுக்குள் விட மறுக்கறாங்க. அம்மா கோவம் தாற்காலிகம்தான்... நான் போயிட்டா அவங்களாலதாங்கிக்க முடியாதுன்னு சொன்ன பாரதி வீட்டு வாசற் படியில் கண்ணம்மாவுடன் உட்கார்ந்துக்கறான்.
போன் அஞ்சலி
அஞ்சலி பாரதிக்கு போன் செய்து...என்னைவிட அவ எந்த விதத்துலடா உசத்தியா போயிட்டா ... நான் மிஸ் சென்னை பாரதின்னு கத்தறா. சோ வாட்னு அசால்ட்டா கேட்கறான் பாரதி.
கல்யாணம்
அவளை இரக்கப்பட்டு கல்யாணம் செய்துகிட்டியான்னு கேட்கறா...இல்லைன்னு சொல்றான் பாரதி. நான் அழகுடான்னு இவ சொல்ல, அவளுக்கு அழகான மனசுன்னு இவன் சொல்றான்.
வாழ முடியாது
நீ நிம்மதியா வாழ முடியாதுடா...உன்னை வாழ விட மாட்டேன்னு கத்தறா அஞ்சலி. நீ கத்து...எதை வேணா போட்டு உடை... என் பொண்டாட்டி எனக்காக காத்து இருக்கான்னு சொல்லிட்டு,வீட்டு வாசற்படியில் உட்கார்ந்துக்கறான் பாரதி. இவளை நினைச்சுகிட்டு உட்கார்ந்து இருக்கான் பாரதியின் தம்பி அகிலன்.
கிடைச்சதை வச்சு பிடிச்சதா வாழ தன்னை காம்பரமைஸ் பண்ணிக்க பெண்களால் முடியாதா?