Nayagi Serial: சின்ன குழந்தை வாயில இது வரலாமா? சொல்றதும் நீங்க...செய்யறதும் நீங்க...என்னவோ போங்க!
சென்னை: சின்ன குழந்தை வாயில இது வரலாமான்னு கேட்டு கேட்டே எல்லா சின்ன குழந்தையையும் யோசிக்க வச்சுட்டீங்களே...
சொல்றதும் நீங்க.. செய்யறதும் நீங்க.. என்னவோ போங்க..
உங்களுக்கு சென்சார் இல்லாம ரொம்பத்தான் குளிர் விட்டுப் போச்சு!
நாயகி சீரியல்
சன் டிவியின் நாயகி சீரியலில் அனன்யா வேணும்னே அர்த்த ராத்திரியில் காரில் ஒரு புக்கும் இல்லாம மகன் அகிலனோட லாங் ட்ரைவ் போறாளாம்.போலீஸ் பிடிக்க, திருவுக்கு போன் போகுது. அவன் எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லேன்னு சொல்றான்.
அகிலனை விட்டு
உடனே அகிலனை விட்டு அப்பாவுக்கு போன் போட சொல்றா... அப்போதும் அவன் குழந்தைக்கு அப்பா, ஆனா, அவளுக்கு புருஷன் இல்லேன்னு சொல்றான். போலீஸ் வப்பாட்டிக்கு இவ்ளோ திமிரான்னு கேட்கறாங்க. இதுக்கு அனன்யா... குழந்தை அகிலன் முன்னாடி அழறாளாம். இதெல்லாம் குழந்தையை பெரிசா பாதிக்கும்னு நினைக்கறீங்க?
வப்பாட்டின்னா என்னா
உடனே வப்படின்னா என்னன்னு குழந்தை அகிலனுக்கு கேள்வி வருது. இந்த கேள்விக்கு பதில் தெரியாம குழந்தை அம்மாவை சமாதானப்படுத்த முடியலையாம் அகிலனுக்கு. குழந்தைங்களுக்கு இந்த காலத்துல ஆயிரத்தெட்டு வேலை இருக்குதுங்க. இதெல்லாம் யோசிக்க கூட அதுங்களுக்கு நேரமில்லை.
சீன் வச்சுக்கறீங்க
நீங்களே குழந்தைங்க ஸ்தானத்தில் இருந்து சீன் வச்சுக்கறீங்க.. பிற்பாடு குழந்தைங்க வாயில் இது வரலாமான்னு நீங்களே கேட்டுக்கறீங்க..இதுக்கெல்லாம் அவசியமே இல்லை. இந்த காலத்து குழந்தைங்களுக்கு இதுக்கு அவசியமும் இல்லை...நேரமும் இல்லை.
நல்லவேளை.. செல்போன்.. லேப்டாப்..இல்லை டிவியில் தங்களுக்கு பிடித்த விளையாட்டுக்களை பார்ப்பதுன்னு நிறைய பொழுது போக்கு அம்சங்களோடு குழந்தைங்க இருப்பது எவ்வளவு நல்லதாய் போச்சு பாருங்க.
என்னங்க பூச்சாண்டி காட்டறீங்க.. உங்க கதைக்கு குழந்தைங்க தொக்கா? நீங்களே சீன் வச்சுக்கறீங்க... குழந்தைங்க வாயில இது வரலாமான்னு நீங்களே சமாதானமும் சொல்லிக்கறீங்க...!