விஜய் சார்.. ரொம்ப நன்றி.. நெகிழ்ந்து போய் பாராட்டிய சாம்ஸ் விஸ்வநாதன்!
சென்னை: நடிகர் சாம்ஸ் விஸ்வநாதன் நல்ல நகைச்சுவை நடிகர். 100 படங்களுக்கு மேல் இவர் நடித்துள்ளார். கிரேஸி மோகன் நாடக குழுவில் இருந்தவர், இன்னும் இருப்பவர்.
கிரேஸி மோகன் மூலமாகவே தனக்கு சினிமா வாய்ப்பும் வந்தது என்று குறிப்பிட்டு உள்ளார். தல அஜீத்தின் காதல் மன்னன் படத்தில் முதன்முதலாக நடித்தார்.
அடுத்தடுத்து பட வாய்ப்புக்களும் வந்துகொண்ட யிருக்கிறது. நல்ல நகைச்சுவை நடிகர் என்று பலராலும் புகழப்பட்டு இருக்கிறார். இவர் பழம்பெரும் நடிகர் சந்திரபாபு மாதிரி நடிப்பதில் வல்லவர்.
வெளியூர்களில் படப்பிடிப்பை நடத்த வேண்டாம் இங்கு தமிழ் நாட்டிலேயே நடத்த வேண்டும்.அப்போதுதான் இங்குள்ள கலைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என
— @ACTOR CHAAMS VISHWANATHAN (@ACTOR_CHAAMS) March 29, 2019
வேண்டுகோளை வைத்த @actorvijay சாருக்கும் செவிசாய்த்த @Ags_production
ம் பாராட்டுக்கள்.. நல்ல செயல் pic.twitter.com/uarqb4PYk7
இவர்தான் நடிகர் விஜய் குறித்த விவரம் ஒன்றை தமது ட்வீட்டர் வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது...
வெளியூர்களில் படப்பிடிப்புகள் நடத்த வேண்டாம். இங்கு தமிழ் நாட்டிலேயே நடத்த வேண்டும். அப்போதுதான் இங்குள்ள கலைஞர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என வேண்டுகோளை வைத்த ஆக்டர் விஜய் சாருக்கும், செவி சாய்த்த ஏஜிஎஸ் புரொடக்ஷன்கும் பாராட்டுக்கள்.. நல்ல செயல் என்று ட்வீட் செய்துள்ளார் சாம்ஸ் விஸ்வநாதன்.
ஆஹா.. அர்ஜூன் அப்பா ரூமிலும் ஃபேன் சுத்தலையாமே.. அப்ப கல்பனா நிலைமை!!
இப்படி நடந்தா நல்லாருக்கும்தானேன்னு தமிழ் திரையுலகில் பேச்சுக்கள் நடக்குது.