சந்திரா வீட்டுக்கு வந்தாச்சு.. டைவர்ஸ் செய்யவும் பேப்பர் போட்டாச்சு.. சீரியல் சூடு பிடிக்குமா?
சென்னை: சன் டிவியின் சந்திரகுமாரி சீரியலில் ராதிகா சந்திராவா நடிச்சு இருந்தாங்க. இந்த நேரத்துல சந்திராவை காணோம்னு கதைப்படி சொன்னாங்க.
அதுக்குப் பிறகு ராதிகாவா காணாம போன சந்திரா, விஜி சந்திரசேகரா கிடைச்சாங்க. உயிர் பிழைக்க வச்ச குடும்பத்துல ஒரு கஷ்டம். அதை சரி செய்ய முயற்சித்து, அந்த வீட்டு ரெண்டு வயசு பொண்ணுங்களை அழைச்சுக்கிட்டு தன் பொண்ணு அஞ்சலிகிட்ட வந்துடறாங்க.
அக்காவுக்கு காதலன் தந்த கிஃப்டை தங்கச்சி போட்டு உடைச்சுட்டாளே...!
சந்திரா வந்தது, சந்திரா புருஷனுக்கு தெரிஞ்சு, அத்தனை நாள் எங்க தலைமறைவா இருந்தேன்னு கேட்கறார். வெட்கமா இல்லை, நான் ஏன் தலைமறைவா இருக்கணும்.. ருத்ராதான் ஆள் வச்சு என்னை அடிச்சா.. செத்துட்டேன்னு மூட்டையில் கட்டி தூக்கி போட்டுட்டாங்க..
பிழைச்சு வந்திருக்கேன்... தலைமறைவா இருந்தியான்னு கேட்கறீங்க. உங்களுக்கு என்கிட்டே டைவர்ஸ் வேணும் அவ்ளோதானே.. இதோ பாருங்க இந்த வெத்து பேப்பர்ல கை எழுத்து போட்டு தரேன். இதுல எது வேணா எழுதிக்கோங்க.
என்னையும், என் பொண்ணையும் விட்ருங்க.. இனிமேலாவது ருத்ராவால எனக்கும், என் பொண்ணுக்கும் எந்த பிரச்சனையும் வரக் கூடாதுன்னு கை எழுத்துப் போட்டு குடுத்துடறாங்க.
ருத்ராகிட்ட வந்து சந்திராவை நீ ஆள் வச்சு அடிச்சியான்னு கேட்கறாங்க. ஓ..தலைமறைவா இருந்து இப்போ வெளியில வந்தாச்சா.. அவ்ளோ என் மேல குத்தம் சொல்றவங்க டைவர்ஸ் பேப்பர்ல கை எழுத்து போட்டு தர வேண்டியதுதானேன்னு கேட்கறா. காரில் அந்த பேப்பரை கசக்கி போட்டுவிட்ட சந்திராவின் புருஷன், சந்திரா வெத்து பேப்பரில் கைஎழுத்து போட்டு தந்ததை மறைச்சுடறார்.
என்னவா இருக்கும், இனியாவது சந்திரகுமாரி சீரியல் திருப்பு முனையா நல்லா போகுமா.. இப்பபோதைக்கு சந்திரகுமாரி சீரியல் போர்தாங்க..