Chandralekha Serial: லவ்வர்ஸ்க்கு இது யூனிவர்சல் கோடா?.. அப்போ தப்பான காதலுக்கு?
சென்னை: சன் டிவியின் சந்திரலேகா சீரியல் போலவே அந்த டிவியின் அக்னி நட்சத்திரம் சீரியலும் இருக்கிறது. சந்திரலேகாவில் நாத்தனார், அண்ணிக்குள் பெண் குழந்தைகள் மாறிப் போனது 5 வருடங்களுக்குப் பிறகுதான் பிள்ளைகளுக்கு தெரியுது.
அக்னி நட்சத்திரம் சீரியலில் நண்பனின் குழந்தை இறந்து போக, இவனுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறக்க அதில் ஒரு குழந்தையை தனது மனைவிக்கு கூட தெரியாமல் கொடுத்து விடுகிறான்.
இப்படி இரு பெண்களில் தங்களுக்கு முன்னால் அம்மா, அப்பான்னு இருந்தும் அறியாமல் வேறு வேறு வீட்டில் வளர்கிறார்கள். இப்படி சின்ன சின்ன மாற்றத்தில் இரண்டு சீரியல்கள் போகின்றன.
கவனிக்குமா சன் டிவி
இப்படி ஒரே கதையில் இரண்டு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் ஒரு காமெடி என்னவென்றால் சந்திர லேகா சீரியலிலும் ஒருத்தி காதலிப்பவனையே இன்னொருத்தியும் காதலிக்கிறாள். இப்போது அக்கினி நட்சத்திரம் சீரியலிலும் அப்படித்தான் ஒருத்தி காதலிப்பவனையே இன்னொருத்தியும் காதலிக்கிறாள்.
இப்போதானே களத்துல இறங்கி இருக்கோம்..இனி என்னென்ன சீரியல் கதை ஒன்றாக இருக்கிறது என்று அவ்வப்போது சொல்லத்தான் போகிறோம்.
Manjari: எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.. அதுவும் லட்டு போல.. மலைக்க வைக்கும் மஞ்சரி!
சரி விடுங்க
சந்திரலேகா சீரியலில் சந்திரா ரொம்ப நல்ல பொண்ணு. லேகா பணக்கார வீட்டில் வளரும் திமிர் பிடித்த பொண்ணு. இவள் சந்திரா சபரி இருவரும் காதலிப்பதை பொறுத்துக்க முடியாமல், சபரியை சந்திராவின் நல்ல குணத்தை உபயோகிச்சு கல்யாணமும் செய்துக்கறா. சரி, ஆசைப்பட்டபடி கல்யாணம்தான் பண்ணிகிட்டாளே என்று பார்த்தால், புருஷனை தன்னை தொட விடாதபடி அடிமையாக நடத்துகிறாள். எப்போதும் டார்ச்சர்.
வீட்டு மாப்பிள்ளை
வீட்டோடு மாப்பிள்ளையாக சபரியை வச்சுக்கிட்டிரு, லேகா அம்மாவுடன் சேர்ந்துகொண்டு புருஷனையும், மாமியாரையும் பாடாய் படுத்துகிறாள். இவளுக்கு ஆறுதலாக ஒரு தோழி கிடைக்க, அவளுடன் அடிக்கடி பேசி, ஆறுதல் கொள்கிறான். ஆனால்,இவன் பேசும் தோரணையில் தோழி இவன் மீது காதல் கொள்கிறாள்.
இல்லை நீ பேசு
சபரி குளிக்கப் போக, அந்த பெண் தோழி போன் செய்கிறாள். கீழே உட்கார்ந்து இருந்த லேகாவுக்கு எரிச்சலாக இருக்குது. அத்தை உங்க புள்ளை போன் அடிச்சுக்கிட்டே இருக்குது..அவரை எடுத்து பேச சொல்லுங்கன்னு கத்துகிறாள்.அவன் குளிச்சுகிட்டு இருக்கான்மான்னு சொல்லிட்டு போயிடறாங்க. சரி, நாமாவது போனை எடுக்கலாம்னு எடுத்தால், அந்த பக்கம் பேச்சே காணோம்.
இவளும் ஹலோ சொல்லலை, அவளும் பேசலை. பொறுமையா இருந்த லேகா, ஏண்டி இப்படி ஒரு யுனிவர்சல் கோடா உங்களுக்கு? யாரடி நீ? இன்னொருத்தி புருஷன் கூட கள்ள காதல் உனக்கு இந்த கோட் வேறயா?
கேளுங்க அத்தை
அத்தை நான் கேட்டல் உங்க புள்ளை எகிறுவார்.நீங்களே அந்த தோழி யாருன்னு கேளுங்க. நான் கேட்டால் இதுதான் சாக்குன்னு காட்டு கத்தல் கத்துவார். பொண்டாட்டிக்கு கேட்க உரிமை இருக்கற மாதிரி பெத்த அம்மாவுக்கும் புள்ளை ஒழுக்கமா இருக்கணும்னு எண்ணமிருக்கும் இல்லை.நீங்க அவர் சட்டையைப் பிடிச்சு கேளுங்கன்னு கத்துகிறாள்.
லவ்வர்ஸுக்கு ஓகே இந்த கோட்.. ஆனால், தப்பான லவ்வர்ஸுக்கு வேணாமே!