சின்னவருக்கு சின்னக் கவுண்டர் சீன்... எங்கப்பா அந்த முத்து மணிமாலை...!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் சின்னவருக்கு சின்னக்கவுண்டர் சீன் வச்சிருக்காங்க. முத்து மணிமாலை பாடல் மட்டும் மிஸ்ஸிங்.
முத்துசெல்வி தங்கை தங்கத்துடன் தாண்டி விளையாடிட்டு இருக்கா. அங்கு வந்த சின்னவரை விளையாட கூப்பிட்டு வம்புக்கு இழுக்கறா.
சின்னவரும் முத்துச்செல்வி கூப்பிட போட்டி வச்சுக்கிட்டு விளையாட வர்றார்.
ஒரு கெட்டவன் கையில கண்ணாம்மாவை பிடிச்சு குடுக்கணும்... ஆஹா என்ன ஒரு எண்ணம்!
காது வரைக்கும்
முத்துச்செல்வி தங்கச்சி தங்கத்துக்கு வாய் காதுவரைக்கும் இருக்கு. பெரிய மனுஷத்தனமாய் அக்காவுக்கு காதல் அறிவுரை சொல்லும் அளவுக்கு பேச்சு.
கிழிச்சுட்டாரே தங்கம்
நான் எழுதின லவ் லெட்டரை கிழிச்சு போட்டுட்டாரே தங்கம்னு முத்துச்செல்வி வருத்தப்படறா. இந்த மனுஷனுக்கு என்மேல காதல் இல்லையா.. சும்மா அவமானப்பட்டு கெடக்காளே வாழ்க்கை குடுப்போம்னு கல்யாணம் செய்துக்க சம்மதிச்சாரான்னு சொல்றா...
சின்னவரு டெஸ்ட்
அக்கா அவர் லெட்டரை கிழிச்சு போட்டும் நீ சும்மா இருக்கியான்னு சின்னவரு உனக்கு டெஸ்ட் வைக்கறாருக்கான்னு தங்கச்சி உசுப்பேத்தறா. அப்படியா சொல்ற தங்கம்னு முத்து செல்வி கேட்கறா.
கெத்து செல்வி
பாரு இன்னும் அவரை அசத்தி கவிதை எழுதி,இந்த முத்துச்செல்வி கெத்து செல்விதான்னு காட்டேறேன்னு சபதம் வேற விடறா ..சின்னவரு வீட்டுல எவ்ளோ பெரிய பிரச்சனை ஒட்டிக்கிட்டு இருக்கு. இதுங்க ரெண்டும் என்னன்னா...
தங்கச்சி கூட
முத்துச்செல்வி தங்கச்சி தங்கம்கூட தாண்டி விளையாடிட்டு இருக்கா.. அப்போ இந்த சின்னது இருக்குதே.. அது சொல்லுது...அக்கா சின்னவரு வர்றாரு பாரு அவரை கொஞ்சமா வம்புக்கு இழுக்கலாமான்னு கேட்குது.
உப்பு மூட்டை
சின்னவரு வர என் கூட தாண்டி விளையாட வாங்க சின்னவரே.. தோத்துட்டா அவங்க ஜெயிச்சவங்களை உப்பு மூட்டை தூக்கணும்னு முத்துச்செல்வி சொல்ல... சின்னவரும் ஓகே சொல்லி ரெண்டு பெரும் விளையாடறாங்க.
ஜெயிச்சுட்டார்
சின்னவரு விளையாட்டில் ஜெயிச்சுட்டார் .. பாரு புள்ள ஜெயிச்சுட்டேன்..இப்போ நீதான் என்னை உப்பு மூட்டை தூக்கணும்னு சொல்றார். அவ முடியாது சின்னவரேன்னு ஓட இவர் துரத்த ஒரே விளையாட்டு..
முத்து மணிமாலை
ஓடிப் பிடிச்சு விளையாடியதில், முத்துசெல்வி கழுத்திலிருந்த முத்து மணிமாலை மீது சின்னவரு கை பட்டு அறுந்து விழுந்துருது.இப்ப எடுக்கவா கோர்க்கவான்னு சின்னவரு பார்த்து நிற்க.. முத்துசெல்வியும் பார்த்துகிட்டு நிக்கறா.
பாட்டு
ஆனா, பாருங்க முத்துமணி மாலை பாடலை பின்னணியில ஒலிக்க வைக்கலை. சுட்டாலும் நியாயமா சுடறாங்க போல..அறுந்து விழுந்த மலையை சின்னவரு என்ன செய்யறார்னு பார்க்கலாமே...