Kanmani Serial: அப்படியே சேம் சின்ன கவுண்டர்தான்.. டிட்டோ காப்பியா இருக்குபா!
சென்னை: கண்ணு படப் போகுதய்யா சின்ன கவுண்டரே.. அது சின்ன கவுண்டர் படத்தில். சன் டிவியின் கண்மணி சீரியலில் கண்ணு படப் போகுதய்யா சின்னவரேதான். அப்படியே சேம்... சின்ன கவுண்டர் செய்யும் செயல்கள் எல்லாம் செய்யறார் நம்ம சின்னவர்.
தர்மதுரை மாமா நல்லா படிக்கும் ஒரு பையனை தன் செலவில் டவுனுக்கு அனுப்பி படிக்க வைக்கிறார். மாமா அந்த பொறுப்பை கண்ணன் கையில் கொடுக்க. அன்று முதல் சின்னவர் கண்ணன் அந்த பையனின் படிப்பு விஷயங்களை கவனித்து வருகிறார்.
சின்னவர் படிக்க வைத்து வரும் பையன் இப்போது ஐஏஎஸ் படிப்புக்கு தயாராகி வருகிறான். சின்னவரை கும்பிட்டுக்கோ என்று அம்மா சொல்ல, அப்போதுதான் அவன் சின்னவரை பார்க்கிறானாம். இப்படி போகுது கதை.
வளர்மதி வான்மதி
சித்தப்பா ராஜதுரையின் பெண் வான்மதி இந்த ஐஏஎஸ்க்கு படிக்கும் பையனுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆகி விடுகிறாள். சின்னவர் காலில் விழுந்து நமஸ்காரம் செய்யும் பையன். ராஜதுரை காலிலும் விழுந்து ஆசீர்வாதம் பெறுகிறான். அப்போதுதான் சித்தப்பா சொல்றார்.. கண்ணா எல்லாரையும் சரிக்கு சமமா நினைக்காதே.. நாளைக்கு இவர்களில் ஒருத்தன் உன் தோளில் கைபோட்டு நம்ம வீட்டுக்கே பொண்ணு கேட்டு வருவான் என்று.
கண்ணன் சின்னவர்
அப்போது சின்னவரான கண்ணன், மாமா ஏற்றத் தாழ்வு இல்லாமல் சரிசமமா பழகறது எப்படின்னுதான் எனக்கு தர்மதுரை மாமா கத்துக் கொடுத்து இருக்கார். இன்னும் சொல்லப் போனால் ஏற்றத் தாழ்வு பார்த்து இருந்தா அக்காவை மாமா கல்யாணம் செய்து எங்க ரெண்டு பேரையும் வீட்டுக்கு அழைச்சுட்டு வந்து இருக்க மாட்டார். நல்லதுன்னா நினைச்ச உடனே செய்துடணும் அவ்ளோதான் மாமா நான் காத்துக்கிட்டதுன்னு சொல்றான் கண்ணன்.
கற்ற பாடம்
இதில் கற்ற பாடம் என்ன என்று கேள்வி கேட்பது போல.. இந்த சம்பவத்தில் இருந்து என்ன தெரியுதுன்னு பார்த்தா.. கண்ணன் படிக்க வச்ச பையன் வான்மதியை காதலிச்சு பொண்ணு கேட்டு வர போறான். இப்படி கெஸ் பண்ற மாதிரி சுலபமான கதை சின்ன கவுண்டர் பாணி கண்மணி சீரியல். சின்னவர் கண்ணனா சஞ்சீவ் நல்லா நடிச்சு இருக்கார்.
கதை இல்லை
கடந்த இரண்டு வாரத்துக்கு முன்னால் விறுவிறுன்னு இருந்த கண்மணி சீரியல், இப்போ வேகம் குறைஞ்சு சுவாரசியம் இல்லாமலும் இருக்கு. அதில்தான் புதிதா இந்த சின்ன கவுண்டர் சீனை செருகி இருக்காங்க. காட்சி அமைப்புகளுக்கு சஞ்சீவ் பொருத்தமா இருப்பதனால் ரசிக்கலாம்.