For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Chithi Serial: கடவுளே...மொடா குடிகாரன் ... கிருஷ்ணாவா இது?

Google Oneindia Tamil News

சென்னை: 90ஸ் கிட்ஸ் பார்த்து மகிழ்ந்த சித்தி கோவிட் 19 தொற்று காரணமாக மறு ஒளிபரப்பாகி வருது. சில பேர் சீரியலை ஒரு வாரம்தான் பார்க்கலை.... ராமுவோட நண்பன் கிருஷ்ணன் அதுக்குள்ளே மொடா குடிகாரனா மாறிட்டாரே....!

ஆரம்ப கட்டத்தில் கதை விறு விறு என்றுதான் நகர்கிறது. இன்னும் போகப் போக எப்படி இருக்குமோ என்று பொறுத்திருந்து பார்க்கலாம். ராமுவை பழிவாங்க, அவனின் நண்பன் கிருஷ்ணாவை திருமணம் செய்துக்கொண்டு, அவனை குடிகாரனாக மாற்றி அழகு பார்ப்பது என்பது பிரபா போன்ற பெண்களால்தான் முடியும்.

சித்தி சீரியலில் நடிகை யுவஸ்ரீ காட்சிக்கு காட்சி அழகழகான உடை என்று அசத்துகிறார். பணக்கார வீட்டுப் பெண் என்று சொன்னால் நம்பும் அளவுக்கு அவரது உடைகளும், நடவடிக்கைகளும் இருக்கிறது.

விமானத்தில் போக போறீங்களா.. ஆரோக்கிய சேது ஆப் உள்ளிட்ட 'இதெல்லாம்' கட்டாயம்.. மறந்துடாதீங்க !விமானத்தில் போக போறீங்களா.. ஆரோக்கிய சேது ஆப் உள்ளிட்ட 'இதெல்லாம்' கட்டாயம்.. மறந்துடாதீங்க !

 கிருஷ்ணா ராமு

கிருஷ்ணா ராமு

ஸ்ரீரங்கத்தில் பிறந்த ராமுவும், கிருஷ்ணாவும் இணை பிரியாத நண்பர்களாக இருக்கிறார்கள். ராமு சென்னை கிளம்பியபோது கிருஷ்ணனும் கூடவே வந்துவிட. பாவம் கிருஷ்ணனுக்குத்தான் இது போறாத காலம் ஆகிவிட்டது. பிரபா வம்படியாக வந்து கிருஷ்ணனை கல்யாணம் செய்துக்கொண்டு, படாத பாடு படுத்திவிடுகிறாள்.

 குடிகாரன் லட்சியம்

குடிகாரன் லட்சியம்

பிரபா தான் காதலித்த ராமுவுக்கு பாடம் கற்பிக்க, அவனது உற்ற நண்பனான, தான் வேண்டா வெறுப்புக்கு கல்யாணம் செய்துக்கொண்ட புருஷன் கிருஷ்ணனை குடிகாரனாக்கி விட வேண்டும் என்கிற லட்சியத்துடன் பயணித்து, கூடிய விரைவில் வெற்றியும் கண்டுவிட்டாள். ஒரே வீட்டில் இருந்த ராமுவுக்கு, சாரதாவுக்கும்.. ஏன் குழந்தை காவேரிக்கு கூட இந்த விஷயம் தெரியலை பாருங்களேன்...!

 குடிக்கலேன்னா போச்சு

குடிக்கலேன்னா போச்சு

கிருஷ்ணாவால் குடிக்காமல் இருக்க முடியாதாம்... குடிக்கலேன்னா கால் ஒரு பக்கம், கை ஒரு பக்கம் என்று புது கற்பனையில் கிருஷ்ணாவின் உடம்பை குடி பாதிக்கிறது. நடிகர் சுரேந்தர் பரிதாபத்தை சம்பாதித்துக் கொள்ளும்படி மிக நன்றாகவே நடித்து இருக்கிறார்.

 சொந்த புத்தி

சொந்த புத்தி

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்கிற பழமொழிக்கு ஏற்ப, பிரபாவின் கதாபாத்திரத்தை படைத்து இருக்கிறார்கள் ராமுவைப் பழி வாங்க வேண்டும் என்கிற ஆத்திரத்தில் மட்டுமே இருக்கும் பிரபாவுக்கு சொந்தபுத்தி வேலை செய்யவில்லை. பாப்பா... பாப்பா என்று தன்னை சுத்தி வரும் வேலைக்காரன் வேலு கெட்ட ஆலோசனைகளைத் தர...அதன்படி கிருஷ்ணாவை அவசர அவசரமாக கல்யாணம் செய்துக்கொண்டு, இப்படி சீரழித்து வருகிறாள்.

English summary
At the initial stage, the story moves on to boredom. Let's wait and see how it goes. It is only women like Prabha who can take revenge on Rama, marry his friend Krishna and make him drunk.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X