Web Series: ராணுவ வீரர்கள் போல பலியானது பயங்கரவாதிகளா?
மும்பை: கோட் எம் ஜீ5 வெப்சீரீஸ் பெண் ராணுவ அதிகாரி.. ராணுவ வழக்கறிஞர் தொடர்புடைய கதையை கொண்ட இந்தி மொழி வெப் சீரீஸ் ராணுவம் என்று வந்தாகிவிட்டது பயங்கரவாதிகள் இல்லாமலா?
பாகிஸ்தான் பயங்கரவாதிகள்.. இவர்கள் ராணுவ வீரர்கள் போல பலியான கதை என்று கோட் எம் வெப் சீரீஸ் மிகுந்த சுவாரஸ்யத்துடன் பயணிக்கிறது.
என்கவுண்டர் செய்து கேஸ் முடிந்தது என்று முடிக்கப்பட்ட ஃ பைலை எடுத்து விசாரிக்கும் பொறுப்பு வந்து சேர்கிறது பெண் ராணுவ வழக்கறிஞருக்கு. ராணுவ வீரர்கள் என்கிற போர்வையில் எப்படி பயங்கரவாதிகள் பலி ஆனார்கள்..
கோட் எம் வெப் சீரீஸ்
கோட் எம் என்பது வக்கிர குணங்களின் உச்சம் அதிகாரம் செலுத்தப்படும் போது என்ன நடக்கும் என்பதற்கான கதை; அது மட்டும் இல்லாமல் கோட் எம் என்பதில் ஒரு உயர் மட்ட இராணுவ விசாரணை எப்படி எல்லாம் பயணிக்கும் என்பதை துல்லியமாக விளக்கும் கதை கதைப்படி ஒரு வழக்கு எல்லாருக்கும் தெரிந்த மற்றும் முடித்து வைக்கப்பட்ட என்கவுண்டர் வழக்கு. ஆனால், அதை மீண்டும் தூசித் தட்டி எடுத்து விசாரிக்க வேண்டிய கட்டாயம் எதனால் ஏற்படுகின்றது என்பதை விளக்கும் கதை கோட் எம்.
ராணுவ வீரர் பயங்கரவாதிகள்
இரண்டு பயங்கரவாதிகள் மற்றும் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்ட ஒரு என்கவுண்டரை விசாரிக்க பெண் அதிகாரி புறப்பட்டு அவர் வழக்கின் விசாரணை பற்றி மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் கலந்து பேசுகிறார். அப்போது துருவ துருவ பல விஷயங்கள் அடுக்கடுக்காய் வரத் துவங்குகின்றன. அப்போதுதான் இரண்டு பயங்கரவாதிகள்' இராணுவ வீரரைப் போலவே பலியாகி விடுவதன் விவரம் முழுவதுமாகத் தெரிய வருகிறது.
கோட்பாடுகள் கட்டுப்பாடுகள்
இந்திய இராணுவத்தையும் அதன் கட்டுப்பாடுகள் மற்றும் கோட்பாடுகளை இந்த வெப் சீரீஸில் நன்றாக கொண்டு வந்து இருப்பதாக பார்த்தவர்கள் அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்று உள்ளது கோட் எம். தயாரிப்பாளர்கள் பல புதுவிதமான யாரும் எதிர்பார்க்காத திருப்பங்களை கதையில் கொண்டு வந்துள்ளனர் என்றும் கூறுகின்றனர்.
இந்திய ஒருமைப்பாடு
இந்திய ஒருமைப் பாட்டில் சிக்கலான சிக்கல்களை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதையும் கோட் எம் காட்டுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.. பதற்றத்தின் மத்தியில் பயங்கரவாதிகளின் உடல்களை வெளியேற்றுவதைக் கண்டு பீதியடைந்த ஜெனிஃபர் கதாபாத்திரம் நன்றாக படைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் நன்றாக நடித்து இருக்கிறார் என்றும் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.