Sembaruthi Serial: ஆத்தி.. கை கழுவிட்டாங்களே...இப்ப பார்த்தா கொரோனாவைரஸ் பயம் வரணும்?
சென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் ஆதியும், பார்வதியும் டைனிங் டேபிளில் சாப்பிட உட்கார.. அப்போது அகிலாண்டேஸ்வரி அம்மா எழுந்துப்பாங்கன்னு பார்த்தால்.. உட்கார்ந்து இருந்தாங்க.
ஆனால், பாருங்க... சமையல் காரம்மா பட்டம்மா தட்டில் ரெண்டு இட்லியும், சட்னியும் வச்ச உடனே.. என்ன நினைச்சாங்களோ.. இல்லை கொரோனாவைரஸ் பயம் வந்துச்சோ.. தட்டிலேயே கையை கழுவிட்டாங்க.
அப்போதுதான் கையை கழுவலையேன்னு நினைவு வந்து இருக்கும் போல... கை கழுவிட்டு எழுந்துட்டாங்க. கூடவே எல்லாரும் எழுந்துவிட.. ஆதியும் பார்வதியும் கூட சாப்பிடாம எழுந்துட்டாங்க.
மனைவிக்கு உரிமை
காரில் ஆதியும், பார்வதியும் ஆஃபீஸுக்கு போறாங்க. அப்போ பார்வதி சொல்றா.. மாமா நான் டைனிங் டேபிளில் உட்காராம இருந்து இருந்தா அம்மா சாப்பிடாம எழுந்து போயிருக்க மாட்டாங்க இல்லை மாமான்னு கேட்கிறாள். அம்மாவுக்கு என்னை பத்தி தெரியும் பார்வதி... மனைவிக்கு சரி உரிமை கொடுக்கறவன்னு தெரியும். அதுக்காக அம்மாவை வீட்டுக் கொடுக்கிறேன்னு அர்த்தம் இல்லைன்னு சொல்றான் ஆதி.
மாலை மரியாதை
கல்யாணம் ஆகி முதன் முறையா புருஷன் பொண்டாட்டியா ரெண்டு பேரும் ஆஃபீஸுக்கு வராங்கன்னு சொல்லி, கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம்னு வரவேற்பு கொடுக்கறாங்க. அதில் கம்பு சுத்தும் விளையாட்டும் இருக்க, ரெண்டு பேரும் அசந்து போயி பார்க்கறாங்க. மாமா கம்பு சுத்துங்க மாமா என்று பார்வதி வேண்டுகோள் வைக்கிறாள்.
விளையாடாதே பார்வதி
விளையாடாதே பார்வதி.. நான் இந்த டிரஸ் போட்டுக்கிட்டு கம்பு சுத்த முடியாதுன்னு சொல்றான். நான் விளையாடல மாமா.. எனக்குத்தான் கம்பு சுத்த தெரியாதே.. உங்களுக்கு நல்லா தெரியும்ல.. ப்ளீஸ் மாமான்னு பார்வதி கெஞ்ச...சரி.. பொண்டாட்டி நீ கேட்டுட்டே...கம்பு சுத்தத்தறேன்னு கிளம்பறான் ஆதி.
ஹீரோ செம சீனு
நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து, எல்லா கலைகளையும் காண்பித்த செம்பருத்தி சீரியலில், ஆதியும் கம்பு சுத்தி ஹீரோ கணக்கா சீனை போட்டுட்டான். எடிட்டிங்கில் ரொம்ப கவனமா பார்த்து பார்த்து ரொம்ப அழகா எடிட் பண்ணி ஆதியின் மாஸை தூக்கி நிறுத்திட்டாங்க.