Pandian Stores serial: பாண்டியன் ஸ்டோர்ஸையும் தாக்கிருச்சே கொரோனாவைரஸ்!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் ஃபிரண்ட் கூப்பிட்டான்னு முல்லையும் கதிரும் ஜோடியா சென்னைக்கு கிளம்பினாங்க. சென்னை மட்டும் இல்லை.. இந்தியாவே லாக் டவுன்னு சொல்லி திரும்பி வந்துட்டாங்க.
என்னடா திரும்பி வந்துட்டீங்கன்னு தனம் அண்ணி கேட்க... அண்ணன்தான் வீட்டுக்கு போங்க.. உலகம் எல்லாம் கொரோனாவைரஸ் பயமா இருக்கு. எல்லாரும் வீட்டுக்குள்ள இருங்கன்னு சொல்லி அனுப்பிட்டாருன்னு கதிர் சொல்றான்.
ஆமாமாம்...ஊரெல்லாம் நோய்னு பீதியில் இருக்காங்க... வீட்டுக்குள்ளேயே இருங்க மாப்பிள்ளைன்னு முல்லையின் அப்பாவும் சொல்றார். இப்படி சீரியல்களிலும் விழிப்புணர்வை கொடுப்பது சூப்பர்.
கண்ணன் மீனா
குட்டி அண்ணி... குட்டி அண்ணி என்று எப்போதும் மீனாவை கலாய்த்துக் கொண்டு இருப்பவன் கடைக்குட்டி கண்ணன். முல்லையும், கதிரும் சென்னைக்கு போறது மீனாவுக்கு பிடிக்கலை. கண்ணனுக்கு கூடப் போகணும்னு ஆசை. மீனாவும் கண்ணனோடு சேர்த்துக்க.. கண்ணா கதிர் ஃபிரண்ட் அவங்க ரெண்டு பேரையும் மட்டும்தாண்டா கூப்பிட்டான். அதனால அவங்க போகட்டும்னு மூர்த்தி அண்ணன் சொல்லிடறார்.
மீனாவுக்கு ஆத்திரம்
கதிரும், முல்லையும் மட்டும் சென்னைக்கு போவதில் மீனாவுக்கு ஆத்திரம். நம்ம கொடைக்கானல் போகும்போது மட்டும் எல்லாரும் ஒட்டிக்கிட்டு வந்தாங்க. இப்போ அவங்க ரெண்டு பேர் மட்டும் ஜாலியா சென்னைக்கு போறாங்களாம் என்று. இருந்தாலும் மனசுக்குள் பொருமிக்கிட்டு இருக்கா.
திரும்பி வந்துட்டீங்க
என்ன மாப்பிள்ளை திரும்பி வந்துட்டீங்க என்று முல்லையின் அப்பா கேட்க... சென்னையில் இப்போ ஒன்னும் இல்லை. கடை கூட இருக்காது. யாரும் வெளியில் போகக் கூடாதுன்னு கவர்ன்மென்ட் சொல்லி இருக்கு.. நீங்க வீட்டுக்கு போங்கன்னு அண்ணன் சொல்லிட்டார் மாமான்னு சொல்றான் கதிர்.
ஆனந்தமா இருக்குமே
இப்போதும் இந்த வாலு பையன் கண்ணன், மீனாவை பார்த்து உங்களுக்கு இப்போ ஆனந்தமா இருக்குமேன்னு கலாய்க்கிறான். கொன்ருவேண்டா உன்னை என்று மீனா சொன்னாலும்.. அப்பாடா சென்னைக்கு அவங்க போகலை என்று குஷியாகிட்டா மீனா.
ஆமாம்.. ஆனந்தமா இருக்குமேன்னு கேட்கிறான் கண்ணன்...ஆனந்தம் தாண்டா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலா மாறி இருக்குன்னு சொன்னா என்ன?