கட்டிலை சும்மா போட்டு.. தொட்டிலை கட்டி போடுறீங்களே...!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் அர்ஜுனும், ரோஜாவும் ரொமான்ஸில் கலக்கி, நாங்க உண்மையான தம்பதிதான்னு வீட்டை நம்ப வச்சுக்கிட்டு இருக்காங்க.
கல்பனா அத்தை கோயிலுக்கு கூப்பிட ரோஜா கிளம்பறா. அர்ஜுன் கோயிலுக்கு எதுக்கும்மா போகணும்.. எனக்குத்தான் சாமிக்காக ரொம்ப வருத்திக்கறது பிடிக்காதேன்னு சொல்றான்.
வேண்டுதல்டா அர்ஜுன்.. ரோஜா நீயாவது சொல்லி அவனை கோயிலுக்கு அழைச்சுட்டு வான்னு சொல்றாங்க. ரோஜா கிளம்புங்க சார்.. அத்தை நாம கோயிலுக்கு வர்றோம்னு நேர்த்தி கடன் வச்சிருக்காங்க. சார் போலாம் சார்னு சொல்றா.
உடனே கிளம்பறான் அர்ஜுன். மருமகளே சொல்றவங்க சொன்னாதான் இப்போ வேலை நடக்குது பாரு மருமகளேன்னு பாட்டி சொல்றாங்க. கல்பனா அத்தை, ரோஜா, அர்ஜுன் மூணு பேரும் கோயிலுக்கு கிளம்பறாங்க.
கோயிலில் தொட்டில் கட்டறதை பார்த்த கல்பனா அர்ஜுன் ஒரு தொட்டில் வாங்கிட்டு வாடான்னு சொல்றாங்க. எதுக்கும்மா தொட்டில்னு கேட்கறான் அர்ஜுன். சொல்றதை செய் அர்ஜுன்னு சொல்றாங்க.
அர்ஜுன் தொட்டில் வாங்கிகிட்டு, இது எதுக்காக வாங்கறாங்கன்னு கடைக்கார அம்மாவிடம் கேட்கறான். தொட்டில் கட்டினா குழந்தை பிறக்கும்னு ஐதீகம் தம்பின்னு சொல்றாங்க. அர்ஜுன் தான் குழந்தையோட நடந்து போறது மாதிரி கனவு காண்கிறான்.
மரத்துல ரோஜாவால எக்கி தொட்டில் கட்ட முடியலை. எக்கி பார்த்தாலும் அர்ஜுன் எப்போ தூக்கலாம்னு காத்து இருக்கான். ஒரு வழியா ரோஜாவை தூக்கி இப்போ கட்டு ரோஜானு சொல்ல, கல்பனா சந்தோஷமாயிடறாங்க.
பாவம் கட்டில் சும்மா கிடப்பதும், ரோஜா கீழே படுப்பதும் கல்பனாவுக்கு தெரியாதுல்ல...