கருப்பு கண்ணம்மாவை கல்யாணம் செய்துகிட்ட பாரதி வாழ்க்கையில் முகம் தெரியாத இருளாமே....!
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் பாரதியும் கண்ணம்மாவும் யாருக்கும் தெரியாம கல்யாணம் செய்துக்கறாங்க.
இதனால் பாரதியின் அம்மா சவுந்தர்யா கடுப்பாகறாங்க...அவங்களுக்கு கருப்பு ஆகாது... ஆமாம்...இந்த அஞ்சலி ஏன் கடுப்பாகறான்னு பார்த்தா....
அவதான் பாரதியை எப்படியாவது நாம கல்யாணம் செய்துக்கணும்னு துடிக்கறாளே..தன்னை காதலிக்கும் பாரதியின் தம்பி அகிலனை அஞ்சலிக்கு பிடிக்கலை.
டார்ச்சர் அஞ்சலி
அஞ்சலியின் டார்ச்சர் தாங்காமல், காதலிக்கும் கண்ணம்மாவை உடனடியாக கல்யாணம் செய்தே ஆகணும்னு கட்டாய நிலைக்கு வந்துட்ட பாரதி, கருப்பு கண்ணம்மாவை ரொம்ப தைரியமா கல்யாணம் செய்துக்கறான். கல்யாணம் ஆன கையோடு அஞ்சலியின் பிறந்த நாள் விழாவுக்கு கண்ணம்மாவை மாலையும் கழுத்துமா அழைச்சுக்கிட்டு போறான்.
பிடிக்கலை அம்மாவுக்கு
பாரதியின் அம்மா சவுந்தர்யா அம்மாவுக்கு கண்ணம்மாவை சுத்தமா பிடிக்காது.அஞ்சலி கல்யாணத்துக்குள்ள கண்ணம்மாவை வீட்டை விட்டு விரட்டணும்னு வேற சொல்லி இருக்காங்க. காரணம் என்னன்னு பார்த்தா சவுந்தர்யா அம்மாவுக்கு கருப்பு பிடிக்காது. பிறந்த நாள் விழாவை கத்தி அலங்கோல படுத்திட்டு, கோவமா வீட்டுக்கு வந்துடறாங்க சவுந்தர்யா அம்மா.
கண்ணம்மாவை வீட்டுக்கு
கண்ணம்மாவை வீட்டுக்கு அழைச்சு வந்துகிட்டு இருக்கான் பாரதி. இங்கே வீட்டில் சவுந்தர்யா அம்மா பாரதி முகத்தை இனமே நான் எப்படிங்க பார்ப்பேன்...அவனை சுத்தி இருட்டு வந்துருச்சு... இருள் அவன் வாழ்க்கையில் சூழ்ந்திருச்சேன்னு அழறாங்க. இது எல்லாமே கண்ணம்மாவின் கருப்பு நிறத்தைத்தான் அப்படி வித்தியாசமா சொல்றாங்க.
பாரதி கண்ணம்மா வந்துட்டாங்க
பாரதியும் கண்ணம்மாவும் வந்துடறாங்க. அவங்களை வீட்டுக்குள்ள வர கூடாதுன்னு சொல்றாங்க. பாரதி எவ்வளவோ சமாதானம் சொல்லியும் சவுந்தர்யா சமாதானம் ஆகலை. வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்க கூடாதுன்னு சொல்லிடறாங்க.
எங்களை வாழ்த்துங்கம்மா
எங்களை வாழ்த்துங்கம்மான்னு பாரதி சொல்ல...என்ன சொல்லிடா என்னை வாழ்த்த சொல்றே.. எனக்கு பிடிக்காத நிறத்துல பெண்ணை கல்யாணம் கட்டிக்கிட்டு வந்து நிக்கறியே...அதே நிறத்துல பிள்ளையை பெத்து போடுன்னு வாழ்த்த சொல்றியான்னு கேட்கறாங்க.வாழ்த்தவும் இல்லை.. சாபமும் குடுக்க நான் தரம் தாழ்ந்து போகலை. ஆனா, வீட்டுக்குள்ள வர கூடாதுன்னு சொல்லிடறாங்க.
அட நல்லாருக்கே இந்த தத்துவம்
இந்த வீட்டுக்கு வெளியில் கிடந்தாலும் கிடப்பேன்.. வீட்டை விட்டு மாடும் போக மாட்டேன்னு சொல்றான். கண்ணம்மா இந்த வீட்டை விட்டு நாம போகக் கூடாது. அழ அழ திட்டுவாங்க... அன்புக்காக அழலாம் கண்ணம்மா..அப்புறம் தனியா நாம ரெண்டு பேரும் வாய்விட்டு சிரிச்சுக்கலாம்னு சொல்றான்.
அட.. இந்த தத்துவம் ரொம்ப ரொம்ப நல்லாருக்கே..