இன்றுடன் தெய்வமகள் சீரியலுக்கு என்டு கார்டா?
தெய்வமகள் சீரியலுக்கு இன்றுடன் என்டு கார்டு போடப்படும் என தெரிகிறது.
Recommended Video
சென்னை: தெய்வமகள் சீரியலுக்கு இன்றுடன் என்டு கார்டு போடப்படும் என தெரிகிறது.
சன் டிவியில் திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் தெய்வமகள்.1460 எபிசோடுகளை கடந்துள்ள இந்த சீரியலுக்கு பெரும் ரசிகர் கூட்டம் உண்டு.
பெரும்பாலான வீடுகளில் தெய்வமகள் சீரியல் பார்த்த பின்னர்தான் இல்லத்தரசிகள் சமையல்கட்டுக்கே செல்வார்கள். அந்த அளவுக்கு மக்களின் மனதில் இடம்பிடித்திருந்தது தெய்வமகள் சீரியல்.
பெரும் ரசிகர் பட்டாளம்
தெய்வமகள் சீரியலுக்கு பெண்கள் மட்டுமின்றி ஆண் ரசிகர்களும் ஏராளம். இந்த சீரியலில் பிரகாஷ், சத்யா, காயத்ரி ஆகிய கதாபாத்திரங்களுக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக ஜெய்ஹிந்து விலாஸின் முன்னாள் மருமகள் அண்ணியார் காயத்ரிக்கு என பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு.
கிரிமினல்ஸ் புத்திசாலி
ஆரம்பத்தில் விறுவிறுப்பாக சென்ற இந்த சீரியல் கடந்த சில நாட்களாக ஜவ்வு மிட்டாய் போல் இழுக்க தொடங்கியது. குற்றங்களை ஆதரிக்கும் வகையிலும் கிரிமினல்ஸை புத்திசாலியாகவும் போலீஸ்காரர்களை முட்டாளாகவும் காட்டியது தெய்வமகள் சீரியல்.
அவசரஅவசரமாக முடிவு
இதனால் போரடித்துபோன ரசிகர்கள் இந்த கொலைக்கார சீரியல் எப்போது முடியும் என கேட்கத் தொடங்கினர். சமூக வலைதளங்களிலும் தெய்வமகள் சீரியலை விமர்சிக்க தொடங்கினர் ரசிகர்கள். இதையடுத்து இந்த சீரியல் அவசரஅவரசமாக முடிக்கப்படுவதாக தெரிகிறது.
மறுப்பக்கம் சோகம்
ஒரு பக்கம் இந்த சீரியல் முடிவடைவதை நினைத்து ரசிகர்கள் சந்தோஷப்பட்டாலும் கடந்த 4 ஆண்டுகளாக வீட்டில் 8 மணிக்கு டான் என ஆஜரான தெய்வமகள் இனி வரமாட்டாளே என்ற சோகத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இன்றுடன் என்டு கார்டு?
பெரும்பாலும் இன்றுடன் தெய்வமகள் சீரியலுக்கு என்டு கார்டு போடப்படும் என தெரிகிறது. மேலும் தெய்வமகள் ஒளிப்பரப்பாகும் நேரத்தில் நாயகி என்ற புதிய சீரியல் வரும் திங்கள் கிழமை முதல் இடம்பெறவுள்ளதாக முன்னோட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.