படகுல படுத்துகிட்டு ஹாயா வானொலியில் பாட்டு....!
சென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியலின் ஒவ்வொரு எபிசோடும் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை பார்ப்பது போலவே இருக்கு.
தேவராஜ், நாகப்பன் இருவருக்குமான பகை, இரு குடும்பங்களை மட்டுமில்லாம,இரு குடும்பத்துக்கு ஆதரவாக இருப்பவர்களையும் பாதிக்குது.
கோயில் திருவிழா நடத்த இருவரும் முன் வந்ததில் ஆரம்பிச்சு இன்று வரை என்ன நடக்குமோ, ஏது நடக்குமோன்னு ரெண்டு குடும்பமும் பயந்துகிட்டு இருக்காங்க.
மெதுவா... இதமா... ரோஜா.. வழுக்கி ரவி மேல விழறா பாக்கியலட்சுமி!
நடு கடல் போட்டில்
நாகப்பனிடம் இருந்து தேவராஜை காப்பாத்த போலீஸ் அவரை நடு கடலுக்கு மீன் பிடி படகில் பாதுகாத்து வைக்கறாங்க. அவரை கடலில் ரெண்டு மீன் பிடி கப்பல் சுத்திக்கிட்டே இருக்கு.
பொண்ணுங்களும்
தேவராஜ் ஹாயா போட்டில் படுத்துகிட்டு வானொலியில் பாட்டு கேட்டுகிட்டு படுத்து இருக்கார். நாகப்பன் வீட்டில் இரவு நேரம் ஆகியும், இன்னும் எதுவும் நடக்கலேன்னு அவரோட ரெண்டு பொண்ணுங்களும் பயந்துகிட்டு இருக்காங்க.
குண்டு மீனில்
நம்ம பயலுவ மீன் கொண்டாந்தாங்களே சமைக்கலியான்னு கேட்கறார் நாகப்பன். இல்லீங்க...நான் பதட்டத்துல இருந்ததுல மீன் அப்படியே இருக்கு.சமைக்க மறந்துட்டேன்னு சொல்றாங்க மனைவி
பொறி தட்டுது
நாகப்பனின் பொண்ணுக்கு திடீர்னு பொறி தட்டுது... மீன் கொண்டு வந்தவன் புதுசா இருந்தானே..மீனை போயி பார்க்கலாம்னு பார்த்தா...அதுல வெடி குண்டு.
தெரியாமல்
யாருக்கும் தெரியாமல் அதைப் பையில் வச்சு கொண்டு போயி கடலில் போட்டுடலாம்னு போறா நாகப்பனின் பெரிய பொண்ணு.இங்கே என்ன நிலவரம்....அங்கே என்ன நிலவரம்னு போலீஸ் பேசிகிட்டு இருக்காங்க...
இப்படி கிளைமேக்ஸ் காட்சிகள் போலவே அமைச்சு..இன்னும் கிளைமேக்ஸ் காமிக்காம இருக்காங்க கிழக்கு வாசல் சீரியலில்.