கிழக்கு வாசல் தேவராஜ் நாகப்பன்னா ஊரே அலறுதே!
சென்னை: சன் டிவியில் நேற்று முதல் காலை 10:30 மணிக்கு கிழக்கு வாசல்னு ஒரு சீரியல் ஒளிபரப்பாகிட்டு வருது.
கதை இன்னும் சரியா பிடிபடலேன்னாலும், தேவராஜ் அண்ணாச்சியா நிழல்கள் ரவி நடிச்சுருக்கார். நாகப்பனா நடிகர் ஆனந்த் நடிச்சுருக்கார்.
தளபதி படத்தில் ரஜினிகாந்த் மாதிரி நிழல்கள் ரவி. மம்முட்டி மாதிரி ஆனந்த். இவங்க ரெண்டு பேரையும் கண்டால் ஊரே நடுங்குது. நிழல்கள் ரவிக்கு ஒரு பொண்ணு இருக்கு. ஆனந்துக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்கு.
புது இன்ஸ்பெக்டர் கிழக்கு வாசல் கிராமத்துக்கு வர்றார். அவர் என்னஒரு கேஸ் கூட இதுவரை பதிவாகலையான்னு கேட்கறார். சார் இந்த ஊரில் முக்கிய புள்ளிங்க தேவராஜ், நாகப்பன்னு ரெண்டு பெரியவங்க இருக்காங்க.
அவங்க இருக்கறதுனால கேஸ் எதுவும் பதிவாகாது சார்னு கான்ஸ்டபிள்ஸ் சொல்றாங்க. அப்படி என்னய்யா ஊருக்குள்ள அவங்க செல்வாக்கு எவ்ளோ தூரம் இருக்குன்னு கேட்கறார்.
சார் இந்த கிராமத்துக்கு உள்ளே வர ரெண்டே வாசல்தான் சார். அதனால ,ஊருக்குள்ள யார் வந்தாலும். ரெண்டு பேருக்கும் தெரிஞ்சுரும் சார்னு சொல்றார் கான்ஸ்டபிள்.
சரி, நான் ரெண்டு பேரையும் ஸ்டேஷனுக்கு வர சொன்னேன்னு சொல்லி, அவங்களோட ஒரு மீட்டிங்குக்கு ஏற்பாடு பண்ணுங்கன்னு இன்ஸ்பெக்டர் சொல்றார். கான்ஸ்டபிள்ஸ் பயந்துகிட்டே ரெண்டு பேர் வீட்டுக்கும் போறாங்க.
சின்ன பிள்ளைங்க வெள்ளாமை வீடு வந்து சேராதாம்... உண்மையா போச்சே!
இதுல ஒரு பியூட்டி என்ன தெரியுமா? இந்த கிழக்கு வாசல் சீரியல் தெலுங்கு டப்பிங் சீரியல், பவுர்ணமி டப்பிங் சீரியல் மாதிரி இந்த சீரியலும் டப்பிங் என்று அவ்வளவு சீக்கிரம் சொல்லிட முடியாதபடி சீரியல் டப்பிங் இருக்கு.