திசை திரும்பும் டிரெண்டிங்... சன் டிவியில் மீண்டும் தேவயானி...!
சென்னை: சன் டிவியில் மீண்டும் நடிகை தேவயானி ராசாத்தி சீரியல் மூலம் நடிக்க வந்துள்ளார்.
சன் டிவியில் சீரியல்கள் கோலோச்சிய நேரத்தில் பிரைம் டைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் ஸ்டார் காஸ்ட் சீரியல்கள் என்று மாறின. அப்படி ஒளிபரப்பாகிய சீரியலில் ஒன்றுதான் கோலங்கள். கோலங்கள் சீரியலில் நடித்த தேவயானி இப்போது ராசாத்தி சீரியல் மூலம் சன் டிவிக்கு மீண்டும் வந்துள்ளார்.
சன் டிவியில் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஒளிபரப்பாகி சக்கை போடு போட்டு வந்த நேரத்தில் கோலங்கள் சீரியல் முடிந்து போனது. கோலங்கள் சீரியலில் நடிகை தேவயானி நடித்து மக்களின் உள்ளங்களை கவர்ந்து சீரியலின் வெற்றிக்கு உறுதுதுணையாக இருந்தார்.
சொல்லிக் கொள்ளும்படி இல்லை
இந்த வெற்றியைத் தொடர்ந்து கலைஞர் டிவியில் மஞ்சள் மகிமை, என்பன போன்று பல சீரியல்களில் தேவயானி நடித்தாலும் சொல்லிக் கொள்ளும்படி வெற்றியாக அந்த வாய்ப்புக்கள் அமையவில்லை. தேவயானியின் சகாப்தம் கோலங்கள் சீரியலோடு முடிந்தது என்றுதான் பேச்சும் உலா வந்து கொண்டு இருந்த்தது.
மாடல் அழகிகள்
டிவி சீரியல்களில் நடிகைகள் நடிப்பது என்கிற ட்ரெண்டிங்காக இருந்தது தேவயானியோடு முடிந்தது. அடுத்த டிரண்டிக்காக விளம்பர மாடல்கள் டிவி சீரியல்கள் நாயகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
மாமியார் கேரக்டர்கள்
அம்மா. மாமியார் வேடங்களுக்கு சினிமாவில் இருந்து ரிட்டையர் ஆன நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு சீரியல் ஸ்டார் காஸ்ட் நட்சத்திரங்கள் என தேர்வு செய்யப்பட்டு மக்களை பார்க்கவைக்கும் யுக்தியாக குறைந்த பட்ஜெட்டில் சீரியலை ஷூட்செய்து டெலிகாஸ்ட் செய்து ஒளிபரப்புவது டிரெண்ங்கில் இருந்து வருகிறது.
தேவயானி
அந்த வரிசையில் மீண்டும் களம் இறக்கப்பட்டு உள்ளார் தேவயானி. சன் டிவியில் இரவு ஒளிபரப்பாகும் ராசாத்தி சீரியலில் நடிகை விசித்திரா நடிக்கிறார். இதில் இவரோடு கைகோர்த்து களம் இறக்கப்பட்டு இருக்கிறார் தேவயானி.
புது டிரெண்ட்
அந்த வரிசையில் நாயகி சீரியலில் நடிகை அம்பிகா அழகு சீரியலில் நடிகை ரேவதி, ராசாத்தி சீரியலில் விசித்திரா, இப்போது அதே சீரியலில் தேவயானி நடித்து வருகிறார். விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் நடிகை பிரகதி, ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் நடிகை பிரியா ராமன், இப்படி டிரண்டிங் திரும்பி வருகிறது.
நடிகைகளுக்கு ரிட்டையரானாலும் வாய்ப்பு வருகிறது. பாவம் நடிகர்களுக்குதான்.. இது போல எதுவும் அமைவதில்லை...!