Naam Iruvar Namakku Iruvar: இதுக்கு வெஜ் எது.. நான் வெஜ் எதுன்னே தெரியாது போலிருக்கே....!
சென்னை: உங்களுக்குத்தான் சமைக்கத் தெரியாதுல்ல.. அப்புறம் காபி போட்டா கேவலமாத்தானே இருக்கும்னு மாயன் சொன்னதை தேவியால் பொருத்துக்கவே முடியலை.
உடனே சவாலுக்கு தயாராகிறாள். சமைச்சு காட்டுங்க நம்பறேன்னு மாயன் சொல்ல... முழு பிரிஸ்க்குடன் களத்தில் குதிச்சுட்டா தேவி. எனவே இப்போது சமையலறையில் புகை பறக்க தேவி..!.
என்ன மெனுன்னு கேட்டா...மட்டன் கேரட் பொரியல்னு சொல்லி கலங்கடிக்கறா...இந்த புள்ளைக்கு வெஜ் எது.. நான் வெஜ் எதுன்னே தெரியாது போலிருக்கே.. எந்த கூட்டணியில் என்னாத்தை சமைச்சு...
மாயன் தேவி
மாயனுக்கு காபி கொடுக்கும்போதே அவன் வண்டை வண்டையா பேசிட்டான்... ஏதோ நானா இருக்கப் போயி அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்னு வேற வாயை விட்டுட்டான். அட்ஜஸ்ட்டான்னு கொந்தளிச்சுப் போயிட்டா தேவி. இப்போ நல்லா சமைச்சு மாயனின் மூக்கை உடைக்கணும். சமையலறை பக்கமே கால் வைக்காத தேவி இப்போ சமையல்கட்டில் என்னமா புகுந்து விளையாடி இருக்கா.
சந்திரமுகி கெட்டப்
சமையலறைக்குள் மச்சினியுடன் வந்த மாயன்.. தேவியைப் பார்த்து ஐயோ அம்மா பேய்னு சொல்லிட்டு ஓடப் பார்க்கிறான். டேய்.. என்று வழக்கம் போல தேவி குரல் கொடுக்க.. இந்த குரலை எங்கியோ கேட்டு இருக்கேனே என்று சொல்லி நின்று திரும்பிப் பார்க்கிறான். சந்திரமுகி மாதிரி முகத்தை அலங்கோலமாக்கி தேவி நிற்கிறாள்.அத்தான்.. இது அக்கா என்று மச்சினி வித்யா சொல்கிறாள்.
என்ன கிண்டலா
டேய்.. என்ன கிண்டலா என்று கேட்கிறாள் தேவி.. பிறகு நீதானே சமைக்கணும்னு சவால் விட்டேன்னு கேட்க.. ஏங்க சமைக்கத்தானே சொன்னேன்.. நீங்க என்னமோ முகத்தில கோலம்லாம் போட்டுக்கிட்டு சந்திரமுகி மாதிரி இருக்கீங்கன்னு சொல்றான். சரி சரி.. அத்தான் என்ன மெனுன்னு கேளுங்க என்று வித்யா சீண்டி விடுகிறாள்.
மட்டன் கேரட் பொரியல்
சரிங்க.. வீடே பத்திக்கிற மாதிரி புகையை கிளப்பிட்டு என்ன சமைச்சு இருக்கீங்க என்று மாயன் கேட்க..தேவிக்கு குதூகலம் வந்துருது. சிரிச்சுகிட்டே மட்டன் கேரட் பொரியல் என்று சொல்கிறாள். ரெண்டு பேரும் அதிர்ந்து போய்.. மட்டன் கேரட் பொரியலா என்று கேட்கிறார்கள். பிறகு அது ஒன்னும் இல்லே.. வித்யா நான் நினைக்கிறேன்..வெங்கடேஷ் பட்.. தாமு ரெண்டு பேரையும் ஒண்ணா இனைக்கறாங்க என்று கிண்டல் அடிக்கிறான் மாயன்.