Naam Iruvar Namakku Iruvar Serial: பல்லி பயத்துல.. இப்படிக்கா முன்னால ...அப்படிக்கா பின்னால!
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் பல்லி பல்லி என்று பயந்த தேவி, மாயனை இப்படிக்கா வந்து முன்னால கட்டிக்கறா.. அப்படிக்கா வந்து பின்னால கட்டிக்கறா... மாயனுக்கு ஜாலிலோ ஜிம்கானாதான்.
ஹொட்டேல் ரூமில் வீறாப்பா வெளியில படுத்துக்கறேன்னு சொல்லிட்டான் மாயன்.அப்போதும் தேவி நீ இங்கியே படுத்துக்கோடானு சொல்றா. இருந்தாலும் மாயன் நேர்மையானவன்.. நியாயமானவன் பாருங்க...
அதனால வெளியில் வந்து படுத்தாலும், மனசு கேட்க மாட்டேங்குது. அவ்ளோ நேர்மையானவனடா நீன்னு தன்னையே திட்டிக்கறான்.அப்போதுதான் ரூமில் இருந்து தேவி பயத்தில் கத்தும் சத்தம் கேட்குது.
பயமா இருக்கு பல்லி
கதைவைத் திறந்து என்னங்கன்னு மாயன் கேட்க... அவனை தாவிக் கட்டிக்கொண்டு.. பல்லி.. பயமா இருக்கு மாயான்னு கண்ணைத் திறக்காமலே அவன் மார்பில் முகம் புதைத்து சொல்றா. பல்லிக்கு பயமா.. இது தெரிஞ்சு இருந்தா ஒரு பல்லி பண்ணையே வச்சு இருந்து இருக்கலாமேடா மயான்னு தன்னைத் தானே நொந்துக்கறான்.
அங்கே பல்லி இங்கே பல்லி
தேவியின் வீக்னஸ் தெரிஞ்சு போச்சு மாயனுக்கு.. உடனே காந்த கண்ணழகி இந்த இங்கே பூசு.. இந்த அங்கே பூசுன்னு நம்ம கவுண்டமணி சார் சொல்ற மாதிரி .. இந்தா இங்கே பல்லி.. அந்தா அங்கே பல்லின்னு விளையாட்டு காண்பிக்கறான். தேவியும் மாயன் செய்யும் மாய வலையில் விழுந்து பயந்து அவனை முன்னும் பின்னுமாக மாத்தி மாத்தி கட்டிக்கறா.
பல்லியை குடும்பத்தோடு
நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க.. அந்த பல்லியை குடும்பத்தோடு அழிக்கலேன்னா என் பேரு மாயன் இல்லைங்கன்னு பல்லிகிட்டே சவால் விடறான் மாயன். இன்னும் தேவி அவனை கட்டிப்பதில் இருந்து விலகி அந்த பல்லி எங்கேதான் இருக்குன்னு பார்க்கவில்லை.
ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா என்று தேவி தன்னைக் கட்டிக்கொண்டு இருப்பதை அனுபவிச்சு ஜாலியா இருக்கான். வாய் மட்டும் பயப்படாதீங்க நான் பார்த்துக்கறேன் அந்த பல்லியை.. இன்னிக்கு நானா அதுவா பார்த்துடலாம்னு இல்லாத பல்லிகிட்டே சவால் விட்டுகிட்டு இருக்கு. வாழ்வுதான் மாயனுக்கு!