Naam Iruvar Namakku Iruvar serial: ஏங்க... இனிமேல் சமைக்கறதை நிறுத்திடவா?
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில், தேன் உண்ட மயக்கத்தில் இருக்கும் மாயனிடம் தேவி நைசாக ஏங்க...இனிமேல் நான் சமைக்கறதை நிறுத்திடவான்னு கேட்கிறாள்.
மாயனும் தேவியும் மயக்கத்தில் கட்டுண்டு கிடக்க... இதுதான் சமயம் என்று மாயனும் தேவியை நெருங்கி அவளை கட்டிக்கொண்டு உட்கார்ந்து இருக்கும் போதுதான் தேவி இப்படி கேட்கிறாள்.
நாம்தான் ஒண்ணு சேர்ந்துட்டோமே...இனிமே எதுக்குங்க அதெல்லாம் என்று வண்டி வண்டியா வழிஞ்சுக்கிட்டே சொல்றான். ஹொட்டேல் ரூமில் இப்படி இருந்தவள் வீட்டுக்கு வந்து ஏன் அப்படி மாறினாள்?
படிப்பு பரீட்சை
ஹொட்டேல் அறையில் இருவரும் ஃபிரஷாக குளித்துவிட்டு அருகருகே மிக நெருக்கமாய் அன்யோன்யமாய் உட்காட்ர்ந்து இருக்கிறார்கள். அப்போது தேவி என்றும் இல்லாத திருநாளாக ஏங்க என்று கூப்பிடறா மாயனை. இவனும் என்னடா இன்னிக்கு புதுசா மரியாதை எல்லாம் பலமா இருக்கேன்னு யோசிக்காம என்ன தேவி செல்ஸ்..னு கேட்கிறான். செல்லத்தை சுருக்கி செல்ஸ்..னு கூப்பிடறான்.
இனி சமைக்க
ஏங்க.. இனிமேல் நான் சமைக்க வேணாம்தானே என்று தேவி கச்சிதமா கேட்க வந்ததை கேட்டு விட்டாள் .மாயனும் மக்குப் பையனாக. இல்லேங்க அதெல்லாம் வேணாம்.. என்னை படி..டெஸ்ட் எழுதுன்னு சொன்னீங்களா.. நானும் பதிலுக்கு உங்களை சமைக்க சொன்னேன். இப்போதுதான் நாம ஒண்ணு சேர்ந்தாச்சுல்ல. இனிமே எதுக்குங்க இந்த பரீட்சை...சமையல் எல்லாம்னு சொல்லிட்டான்.
நிஜமாவா சொல்றே
நிஜமாவா சொல்றேன்னு தேவி கேட்க.. நிசமாத்தாங்க.. இந்த மாயன் என்னிக்காவது பொய் சொல்லி இருக்கேனா என்று கேட்க. அவள் ஆமாம் என்று தலையாட்டி விட்டாள்.. இனிமே பொய் சொல்ல மாட்டேங்க என்று அவளது விரலுக்கு சொடக்கெடுத்து லிட்டர் லிட்டரா வழியறான். தேவியும் செம மூடில்தான் இருக்கா.
என்னாச்சு இவங்களுக்கு
வீட்டுக்கு வந்தாச்சு.. மாயன் இன்னும் அதே தேவின்னு நினைச்சு அவளிடம் போயி.. தேவி செல்ஸ்.. தேவி செல்ஸ்.. என்று கொஞ்சுகிறான். என்ன சொல்லு என்று தேவி கேட்க... நேத்து காலையில் சாப்பிட்டதுங்க.. தேவி செல்ஸ்.. இப்போ பசிக்குதுன்னு சொல்றான். பசிக்குதுன்னா போயி எடுத்துக் போட்டு சாப்பிட்டேன்.. என்னை என்ன நொய்யி நொய்யின்னு தொந்திரவு பண்றேன்னு கேட்கிறாள் தேவி.