நிஜத்தில் நான் அப்படி இல்லைங்க நம்புங்க...! தேவிப் பிரியா
சென்னை: தொலைக்காட்சி சீரியல்களில் செம வில்லியா காமிக்கற மாதிரி நிஜத்தில் நான் அப்படி இல்லைங்க..நம்புங்க என்று பாவம் கெஞ்சாத குறையாக கேட்கிறார் நடிகை தேவிப் பிரியா.
பேசாம நம்பிட வேண்டியதுதான்... என்ன இருந்தாலும் நடிப்பு வேறதானுங்களே... அப்புறம் தேவிப் பிரியா சொல்றதை நம்பாம இருந்தா எப்படி?
சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் தேவிப் பிரியா மனம் திறந்து பேசியதுதான் இது. நல்ல திறமையான நடிகை.இன்னும் வாய்ப்புக்கள் நிறைய காத்து இருக்கு...
நடிப்பு எப்படி
நீங்கள் நடிக்க வந்தது எப்படி .என்றபோது... நிஜமா நடிக்கணும்னு எனக்கு ஆசை எல்லாம் இல்லை. மதுரைக்கார பொண்ணு நான். நிறைய கலைஞர்களை உருவாக்கின ஊர் அது. படிக்கும்போது ஒரு டாக்குமென்டரி .படத்தில் நடிச்சு இருந்தேன். அதை ராஜீவ் மேனன் சார் பார்த்துட்டுத்தான் மின்சார கனவு படத்தில் நடிக்க கூப்பிட்டார்.
நடிப்பு பயணம்
அதன் பிறகு நடிப்பு பயணம் தொடர ஆரம்பிச்சுது. சொந்த குரலில் வேற பேசி நடக்கறது அந்த சமயத்தில் வரவேற்பா இருந்துச்சு. ஆரம்பத்தில் அத்திப் பூக்கள்னு ஒரு சீரியலில் கேரக்டர் ரோல் அதாவது போலீஸ் ஆஃபீசர் ரோல் பண்ணி இருந்தேன். அதில் நல்ல வரவேற்பு கிடைச்சு மக்கள் மனதில் முதலில் அதுதான் பதிஞ்சு இருந்துச்சு.
வில்லி நடிகை
காலப் போக்கில் வில்லி நடிகையாகிட்டேன். அதில் ரொம்ப இறங்கி கேரக்டராவே மாறி நடிச்சதில் ஜனங்க என்னை வில்லியாவே பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. நிஜத்தில் நான் சிரிச்சா .. உங்களுக்கு சிரிக்க கூட தெரியுமான்னு கேட்பாங்க.அதே மாதிரி அழுதாலும் நீங்க அழுவீங்களான்னு கேட்பாங்க.
நம்பியார் மாதிரி
தனிப்பட்ட முறையில் நான் கோயிலுக்கு போயி மனம் உருகி சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்தாலும் நீங்க சாமி கும்பிடுவீங்களான்னு கேட்பாங்க. எப்போதும் எந்த இடத்திலும் நம்பியார் சார் மாதிரி கையைத் தேய்ச்சுகிட்டு வில்லத்தனம் பண்ணிகிட்டே இருக்கறதா ஜனங்க நினைப்பு நம்புங்க.. நிஜத்தில் நான் அப்படி இல்லைங்க என்று சிரிக்கிறார்.