ராத்திரியில் பூத்திருக்கும் தர்ஷா .. ஜூம் பண்ணி பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்!
சென்னை: இரவு நேரத்தில் இந்த மாதிரி போஸ் கொடுத்தா ரசிகர்களின் நிலைமை என்ன ஆகும் என்று தர்ஷா குப்தாவைப் பார்த்துப் பார்த்து ரசித்து உருகுகிறார்கள் ரசிகர்கள்.
இன்ஸ்டாகிராமில் எப்பவுமே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் தர்ஷா குப்தா தற்போது விதவிதமாக எடுத்து குவித்து இருக்கும் போட்டோக்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது .
இரவு நேரத்தில் நிலவை விடவும் பிரகாசமாக இவர் ஜொலித்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் இவருடைய ரசிகர்களை கவிதை மழை பொழிய செய்திருக்கிறதாம்.
என்னங்க சொல்றீங்க.. நம்ம மீனாவா இப்படி பண்ணப் போறாங்க... வாவ்!
செம கிளாமர்
சீரியல்களில் நடித்து பெயர் வாங்கியதை விடவும் இவருக்கு இன்ஸ்டாகிராம் போன்ற இணையதளங்களின் மூலமாகவும் ரசிகர்கள் பட்டாளம் கிடைத்திருக்கிறது . இவர் முதன்முதலில் முள்ளும் மலரும் சீரியலில் அறிமுகமாகி இருந்தாலும் அதில் கிராமத்து கேரக்டரில் இவர் நடித்திருப்பார் . இவருடைய கேரக்டர் சீரியல் பார்க்கும் பெண்களுக்கு ரொம்பவே பிடித்ததாக இருந்தது.
தர்ஷாவின் பீலிங்ஸ்
ஆனால் இவர் நினைத்த இடத்தை அடைய வில்லை என்றுதான் பீல் பண்ணி கொண்டிருந்தாராம் .அதன் பிறகுதான் இவர் கிடைக்கும் நேரங்களில் டிக் டாக் போன்ற மியூசிக்கலில் பிஸியாக இருக்க தொடங்கினார் .டிக் டாக் மூலமாக யாருடா இந்த பொண்ணு என்று கேட்கும் அளவிற்கு பெரும்பெரும் பிரபலமாகிவிட்டார். அதன்பிறகு இவர் இன்ஸ்டாகிராமில் பிரபலமாகத் தொடங்கினார் .
இளைஞர்களின் இதயத்தில் தர்ஷா
அதுவும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இவருக்கு இருக்கிறது போட்டோ சூட்டினால் இவருடைய ரசிகர்களை கட்டி இழுத்து வருகிறார் . எப்போதுமே இவருடைய போட்டோக்களை பார்த்ததும் சிலர் ரசிகர்கள் கவிதை மழை பொழிகிறார்கள் .அந்த மாதிரி தான் தற்போது கூட இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து பலர் சுட்ட கவிதைகளாகவும் சிலர் சொந்த கவிதைகளையும் அள்ளி வீசி வருகிறார்கள். அதில் ஒரு ரசிகர் 'கற்பனை இல்லாத என்னையும் கவிதை பாட செய்தது உனது காதல் கண்கள் 'என்று ஹார்ட்டின் அனுப்பி இருக்கிறார்.
அந்த கன்னக்குழி அழகு
இன்னொரு ரசிகரும் அவருடைய அழகை அணு அணுவாக ரசித்து கவிதைகளைப் போட்டிருக்கிறார் 'பெண்ணே நீ கொள்ளை அழகு ..உன் கடைக்கண் பார்வை அழகு ..பார்த்ததும் தலைகுனிந்து வெட்கம் பக்கம் கொண்டால் அழகு.. கன்னக்குழி அழகு.. கவிதை பேசும் உன் கண்கள் அழகு ...நெற்றிப் பொட்டு அழகு தெளிந்த பார்வை அழகு ...நீ கண் சிமிட்டும் அழகு.. மேகமும் மையல் கொள்ளும் உன் இதழ்கள் அழகு.. நிலமும் பொறாமை கொள்ளும் உன் முகம் அழகு.. மொத்தத்தில் நீ பேரழகு....' என்று கவிதையை தட்டி விட்டிருக்கிறார் அதற்கு தர்ஷா காட்டினை பறக்க விட்டிருக்கிறார்.
ஷிவானி இல்லாத இடத்தில்
அதுமட்டுமல்லாமல் இணையதளத்தில் முன்னணி இடத்தில் இருந்த ஷிவானி ,ரம்யா பாண்டியன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக் போய்விட்டார்கள். நீங்களும் அதேபோல போகவில்லையா உங்களுக்கு போட்டி இப்ப கொஞ்சம் குறைந்தது போல என்றெல்லாம் பல ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள் . சில நெட்டிசன்களும் பிக்பாஸ் நிகழ்ச்சி உங்களை கூப்பிட இல்லையா என்று கலாய்க்கிறார்கள்.
இப்ப மேடம் ரொம்ப பிசி
செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக கலக்கிக் கொண்டிருக்கும் இவர் சூட்டிங்கில் தற்போது பிசியாக இருக்கிறார். இந்த சீரியலில் துரைக்கும் இவருக்கும் திருமணம் நடக்குமா இல்லையா என்று பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் கிடைக்கும் கொஞ்ச நேரத்தையும் புகைப்படங்களை தினமும் எடுத்து இன்ஸ்டாகிராமில் தவறாமல் பதிவிட்டு வருகிறார். இவருடைய போட்டோக்களை இவருடைய ரசிகர்கள் ஜூம் பண்ணி பார்த்து அணுஅணுவாக ரசித்து கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.