ஜிகினா சேலையில்.. சிலுக்கை மிஞ்சி .. எடுப்பாக எகிறி அடிக்கும் தர்ஷா
சென்னை: இன்ஸ்டாகிராமின் இளவரசியாக ஜொலித்துக் கொண்டிருக்கும் தாத்ஷா குப்தா தற்போது நான் மட்டும் ஜொலிக்கவில்லை என்னுடைய சேலையும் ஜொலிக்கிறது என்று ஒரு போஸ்டை போட்டிருக்கிறார்.
ஜிகினா சேலையில் இடுப்பு மடிப்பை காட்டி ரசிகர்களின் கண்களுக்கு குளுமையை கூட்டியிருக்கிறார். இவர் கொடுத்திருக்கும் போஸ் பார்த்து பலர் ரசிகர்களும் எதைப் பார்ப்பது எதை விடுவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தர்ஷா குப்தா என்னும் பெயரை சொன்னாலே தற்போது இளைஞர்கள் மனதில் ஒரு புத்துணர்ச்சி அப்படியே பற்றிக் கொள்கிறது. அந்த அளவிற்கு தீப்பொறியாக ரசிகர்களின் மனதில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறார் தர்ஷா.
இது கூட நல்லாதான் இருக்கு தர்ஷனா.. மரமே வெட்கப்படுமே!
கண்களுக்கு குளுமை
ரசிகர்களின் கண்களுக்கு குளுமையை காட்டுவதில் தவறுவதில்லை. இருந்தாலும் இந்த அளவிற்கு வருவதாலோ என்னவோ இவர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதுவும் தினமும் இவர் போஸ்ட்டுக்காக பலர் காத்துக் கிடக்கின்றனர் அதனால் நாள் தவறாமல் விதவிதமாக போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்.
முந்தானையை சுருக்கி
இடுப்பு மடிப்பில் ஒரு செயினையும் தழுவவிட்டு முந்தானையை சுருக்கி காட்டி எதை பார்ப்பது என்று ரசிகர்கள் திணறும் அளவிற்கு ஹிப் பர்பாமன்ஸ் பன்னி இருக்கும் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்களும் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் கொந்தளித்து வருகின்றாராம். சும்மாவே கவிதைகள் பின்னி எடுக்கும் அவருடைய ரசிகர்கள் இந்த போட்டோவை பார்த்த பிறகு விட்டு வைப்பார்களா.
கவிதை அம்புகள்
போட்டி போட்டுக்கொண்டு கவிதை அம்புகளை வீசி வருகிறார்கள். அதிலேயும் பல ரசிகர்கள் இவரது இடுப்பு செயினை பார்த்துதான் பொறாமைப்பட்டு கொண்டிருக்கிறார்களாம். இந்த இடத்தில் தவழுவதற்கு என்ன தவம் செய்ததோ என்று பெருமூச்சுவிட்டு வருகிறார்கள். அதிலேயும் இவர் சிரித்த முகமாக கொடுத்திருக்கும் போஸ் பார்த்து செய்வதையும் செஞ்சிட்டு சிரிப்பு வரை இருக்குதா என்று கலாய்க்கின்றனர்.
இப்படி கொடுத்தா எப்படி
இந்த மாதிரி போஸ் கொடுத்தால் எப்படி தூங்குவது என்று தவிக்கும் ரசிகர்கள் மத்தியில், என் மன குழப்பத்தை முதலில் தெளிவுபடுத்து பின்பு எனக்கான படைப்பை தெரியப்படுத்து என்று ஒருவர் அசால்டாக கவிதையை தூக்கிப் போட்டு இருக்கிறார்.
கண்களோ கண்டவரை திரும்பிப் பார்
நீங்க இப்படி போட்டா நாங்க வேற மாதிரி வாரோம் என்று இன்னொரு ரசிகரும், பெண்ணே உன் அழகு அன்னத்தை வீழ்த்தும் கண்களோ கண்டவரை திரும்பிப்பார் என அழைக்கும் உருவமோ புதுப்புது கவிதைகளை சொல்லும் கரிய கூந்தலும் மேகத்தை இழக்கச் செய்யும் அசைந்து அசைந்து நடைபெறுவதில்லை அன்னமோ இல்லை தேவலோக ரதியோ பூமிக்கு தவறி வந்தவளோ என நிலவும் மறைத்தே போகும்.
சூடிய பூச்சரமோ
ஆயிரமாயிரம் கவிபாடும் கூந்தலில் சூடிய பூச்சரமோ வானவில்லே இல்லை வண்ண மலர்களும் வழிமாறி மயங்கி நிற்கும் அவளின் அழகு ஏட்டில் எழுத இயலாமல் எண்ணத்தில் வடிக்க இயலாத சொற்களால் என்ற பெரு காப்பியமே என்று அவரை உச்சி முதல் உள்ளங்கால் வரை அணு அணுவாக ரசித்து கவிதைகளைப் படைத்திருக்கிறார் .இந்த கவிதைக்கு 5 ஹாட்டினை பறக்க விட்டிருக்கிறார்.
5 ஹார்ட்டின்
இப்படி எல்லாம் ரசிகர்கள் கவிதை மழை பொழிவதால் தான் இவரும் எவ்வளவுதான் சூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக அடிக்கடி போஸ்ட் போட்டு ரசிகர்களின் கண்களுக்கு குழுமையும் மனதிற்கு ஆறுதல் அளித்து வருகிறாராம் .அதை பார்த்து பல நெட்டிசன்களும் நன்றாகவே ஆறுதல் படுத்துங்க அப்போதான் எங்களுக்கு கவலையே இருக்காதே என்று கலாய்த்து வருகின்றனர்.