துருவ் விக்ரமோட நெஞ்சுக்குள்ள குடியிருப்பது யாரு தெரியுமா.. !
சென்னை: சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரமுக்கு அப்பாவுக்குப் பிறகு பிடித்த நடிகர் நம்ம தளபதி விஜய்தானாம்.
ஜீ தமிழ் டிவியில் ஆதித்ய வர்மா படத்தின் சிறப்பு கொண்டாட்டம் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அப்பா விக்ரமும், பிள்ளை ஆதித்ய வர்மாவும் கலந்துகொண்டு உள்ளனர்.
வரும் ஞாயிறு பகல் 12: 30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அதன் ப்ரோமோ பார்க்க பார்க்க நன்றாக இருக்கிறது. விக்ரம் இளமையாக அழகாக இருக்கார்.
ஆதித்ய வர்மா
ஆதித்ய வர்மா படம் ஆரம்பத்தில் இருந்தே சிக்கலை சந்தித்து, இரண்டாவது முறையாக படம் ஷூட் செய்யப்பட்டது எல்லாரும் அறிந்த ஒன்றுதான். என்றாலும், இதுவே துருவ் விக்ரமுக்கு ஒரு நல்ல விளம்பரமாக கூட அமைந்தது என்று சொல்லலாம். இதை எப்படி பயன்படுத்திக்கறார் துருவ் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
யாருக்காச்சும் தெரியுமா? நடிகை அதுல்யா கோயமுத்தூர் பொண்ணுங்க...!
சீயான் விக்ரம்
நடிகர் விக்ரம் முதலில் டப்பிங் பேசி பின்னர் படங்களில் நடித்து பெரும் முயற்சிக்கு இடையே சீயான் விக்ரம் ஆன பிறகுதான் புகழின் உச்சத்துக்கு போனார். இதுக்கு காரணம் இயக்குநர் பாலா. இவருக்கு கைக்கொடுத்த இயக்குநர் பாலா, துருவ் விக்ரமுக்கு கைக்கொடுக்காமல் போனது ஏனோ தெரியவில்லை.
சிறப்பு கொண்டாட்டம்
ஆதித்ய வர்மா படம் ஒரு வழியாக முடிந்துவிட்ட நிலையில், ஆதித்ய வர்மா சிறப்பு கொண்டாட்டம் என்று நிகழ்ச்சியை ஜீ தமிழ் டிவி வரும் ஞாயிறு பகல் 12:30 மணிக்கு ஒளிபரப்ப உள்ளது. இதில் அப்பா விக்ரம், மகன் துருவ் விக்ரம் கலந்துகொண்டு சிறப்பித்து இருக்கின்றனர்.
அடிக்கும் காட்சி
தனது மகன் துருவ் பற்றி விக்ரம் பேசுகையில் சிறந்த நடிகன் என்று சொன்னார். உடன் நடிக்கும் ப்ரியா ஆனந்தை அறையும் காட்சியில் டேக் வாங்காத துருவ் . முத்த காட்சியில் நிறைய டேக் வாங்கினான். ஏன்னு கேளுங்க என்று விக்ரம் விளையாட்டாக சொன்னார். அப்போதுதான் தனக்குப் பிறகு தனது மகனுக்கு மிகவும் பிடிச்ச நடிகர் விஜய் என்று சரியாக மகனின் எண்ணத்தை சொன்னார்.