முத்துமணி மாலை... சின்னவரு எடுத்தாரா கோர்த்தாரா.. செம சீனு!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் அறுந்து விழுந்த முத்து மணிமாலையை கோர்த்து பார்சலில் வச்சுடறார் சின்னவர்.
சின்னவரு கூட முத்துச்செல்வி தாண்டி ஆடும்போது அவளோட முத்து மணிமாலை அறுந்து விழுந்துருது. இப்போ பார்த்தா சின்னவரு கையால தந்த டிரசுக்குள்ள அந்த முத்து மணிமாலை இருக்கு.
சின்னவரு அக்கா பொண்ணு சவுந்தர்யாவுக்கு பிறந்த நாள். ஊரே மெச்ச அதை கொண்டாட நினைக்கறார் சின்னவர்.
நிலாவுக்கு எந்த எவிடென்ஸும் கிடைக்க கூடாது வீரபத்ரா... நீலாம்பரி
புடவை
ஊருக்கே புடவை வேஷ்டி எடுத்து கொடுத்து பிறந்த நாள் கொண்டாட நினைக்கும் சின்னவர், அக்காவுக்கும் மாமாவுக்கும் கூட புடவை வேஷ்டி சட்டை எடுத்து தர்றார். அக்கா இந்த புடவையை நான் கட்டிக்கமாட்டேங்கன்னு சொல்லிட்டு போயிடறாங்க.
முத்துசெல்விக்கு
ஏன் மாமா எல்லாத்துக்கும் துணிமணி எடுத்தியே முத்துசெல்விக்கு எடுத்தியான்னு சவுந்தர்யா கேட்கறா. இல்லை சவுண்டு...மறந்துட்டேன்னு சின்னவர் சொல்ல, நான் முத்துசெல்விக்கு எடுத்து வச்சிருக்கேன். இதை கொண்டு போயி குடு மாமான்னு குடுக்கறா.
முத்துவுக்கு
சின்னவரும் முத்துசெல்விகிட்ட சவுண்டு ஆசையா உனக்கு எடுத்து கொடுத்திருக்கு புள்ள.. பாருன்னு சொல்லிட்டு போயிடறார். பிரிச்சு பார்த்தா அன்னிக்கு அறுந்து விழுந்த முத்துமணி மாலை கோர்த்து இருக்கு.
ஒரு லெட்டர்
அதோட சவுந்தர்யாவின் இரண்டு அக்காக்களும் கண்ணன் மாமா எழுதின மாதிரி வில்லங்கம் பிடிச்ச ஒரு லெட்டரும் இருக்கு.அதாவது முத்துச்செல்வி தனக்கு ஊர் முன்னாடி முத்தம் தரணும்னு கேட்டு எழுதின லெட்டர்.அதனால முத்து மணி மாலையை சின்னவரு கோர்த்தாரா.. இல்லை சவுந்தர்யா கோர்த்தாளான்னுதான் தெரியலை.