நிலாவோட ஒரிஜினல் அப்பாவை நீலாம்பரி காதலிச்சாங்களா?.. அப்ப கல்யாணம்....?
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் பல மர்மங்கள் இருக்குன்னு சொன்னோம். இப்போ மர்மங்கள் எல்லாம் வெளியில வந்துக்கிட்டு இருக்கு.
நேத்துதான் நிலாவின் அம்மா நீலாம்பரி வீட்டுல வேலை செய்யற ரேவதிதான்.ரேவதியோட பொண்ணுதான் நிலான்னு தெரிஞ்சுது.
இப்போ நிலாவோட அப்பா போட்டோவை வச்சுக்கிட்டு, ரேவதி நான் நம்ம பொண்ணை பார்த்துட்டேங்கன்னு சொல்லிக்கிட்டு அழறாங்க.
அப்புறம் கல்யாணம் ஆனது, அண்ணன் அண்ணி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினது.. தான் முழுகாம ஆனதுன்னு எல்லாத்தையும் நினைச்சு பார்க்கறாங்க ரேவதி.
கட் பண்ணி இங்க பார்த்தா நீலாம்பரி மகன் சஞ்சய், கல்யாணம்தான் நடக்கலியேம்மா நான் கிளம்பறேன்.. இதெல்லாம் எனக்கு செட்டாகாதுன்னு சொல்லிட்டு போயிடறான்.
நிலாவின் தங்கச்சி வெண்மதி வந்து.. அவன்தான் கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டான்... நடக்கறதை பார்த்தா நீ நிலா காதலிக்கற கார்த்திக்குக்கே அவளை கல்யாணம் பண்ணி வைக்கணும். இல்லையா அவங்களே கல்யாணம் செய்துக்கட்டும்னு விட்டுடணும்..
கண்மணி அன்போடு.. சின்னவருக்கு கவிதை எழுதறா முத்துச்செல்வி !
நீ அசோக் அண்ணனுக்கு நிலாவை கல்யாணம் பண்ணி வைக்க பார்க்கற...உனக்கு நிலா இந்த வீட்டுக்கு மருமகளா வரணும்னு நினைப்புதான்.... அது ஏன்க்கான்னு தங்கச்சி கேட்கறா.
ஊரறிய அவளை நம்ம வீட்டு மருமகன்னு சொல்லியாச்சு. நமக்குத்தான் அவமானம்..அந்த பொண்ணுக்கும் அவமானம்தானேன்னு சொல்றா. அவளுக்கு எந்த அவமானமும் இருக்காது. கார்த்திக் பார்த்துக்குவான்னு சொல்றா தங்கச்சி.
நீலாம்பரி எழுந்து போயிடறாங்க...பீரோவைத் திறந்து ஒரு கவரை எடுத்து, அதிலிருக்கும் போட்டோவை எடுக்கறாங்க. அதுல அவங்க பக்கத்துல இருக்கறது நிலாவின் அப்பா.. நீலாம்பரி வீட்டில் வேலைக்காரியா இருக்கும் ரேவதியின் புருஷன்.
ஆனா, பிசினெஸ் பார்ட்னர்ஸா இருக்கும்போது எடுத்த படம் இது. நாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்கறாங்க நீலாம்பரி.. சாரி.. எனக்கு கல்யாணம் ஆகிருச்சுன்னு இவர் சொல்ல நீலாம்பரி அதிர்ச்சி ஆகறாங்க...