For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்த நைட்டி பண்ணின வேலை இருக்கே... முழுசா போர்த்திருக்க வச்சுருச்சு...

Google Oneindia Tamil News

சென்னை:விஜய் டிவியுயில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதை ரொம்ப பழமை, பாரம்பரியத்தை பறை சாற்றுவதா இருக்கு. ஒரு கூட்டு குடும்பமா எப்படி வாழறதுன்னு கத்து குடுப்பதாவும் இருக்கு.

குடும்பத்துல நாலு அண்ணன் தம்பிங்க.. மூணு பேருக்கு கல்யாணம் ஆயிருச்சு.கடைசி தம்பி காலேஜ் படிக்கறான்.இவங்க நடத்தற மளிகை கடைதான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

ரெண்டாவது பையனை பணக்கார பொண்ணு மீனா காதலிச்சு கல்யாணம் செய்துக்கறா. இந்த எளிமையான குடும்பத்தோட அவளுக்கு முழுமையா ஒத்துப் போக முடியலை.

வள்ளியோட வெண்ணிலாதாங்க சூப்பரு... அவங்க கெட்டப் ரொம்ப ரொம்ப கலக்கலு... வள்ளியோட வெண்ணிலாதாங்க சூப்பரு... அவங்க கெட்டப் ரொம்ப ரொம்ப கலக்கலு...

மீனா

மீனா

நைட்டி போட்டுகொண்டு மீனா முற்றத்துக்கு வர்றா. இதை பார்த்த கடைக்குட்டி தம்பி, சின்ன அண்ணி உங்க டிரஸ் சூப்பர்னு சொல்றான். எல்லாருக்கும் ஒரு மாதிரி முகம் மாறிப் போகுது. அங்க இருந்தவங்க மூணாவது மருமக, முதல் மருமக, கடைக்குட்டி தம்பி மட்டும்தான்.

உள்ள வா

உள்ள வா

மீனா ஒரு நிமிஷம் உள்ள வான்னு சொல்றா மூத்த மருமக தனம். இவளும் அக்காவுடன் போக, மீனா இது கூட்டு குடும்பம்.. இது மாதிரி டிரஸெல்லாம் போட கூடாது. இங்க உன் புருஷன் மட்டும் இல்லை, மாமா, கதிர், கடைசி தம்பின்னு நாலு ஆம்பளைங்க இருக்காங்க. நைட்டி போடணும்னா, நைட்ல உன் ரூம்ல படுக்கும்போது போட்டுக்கோன்னு சொல்றா.

கோபத்தில்

கோபத்தில்

ஜீவா.. என்ன இது சட்டம்... நைட்டி போட கூடாதா இந்த வீட்டுல.. என்ன சாப்பிடணும், என்ன டிரஸ் போடணும்னு சட்டம் இருக்கா. இது ரெண்டும் என் சுதந்திரம்னு நாளைக்கு நீ உங்க அண்ணிகிட்ட சொல்லணும்னு புருஷன் கிட்ட சொல்றா.

சொல்றேண்டி

சொல்றேண்டி

சரி சொல்றேன்டின்னு சொல்லிட்டு தூங்கிட்டான் ஜீவா. மீனா குளிச்சுட்டு, புடவை உடுத்தி, முந்தானையால் முக்காடு போட்டு முகத்தை மறைச்சுக்கிட்டு வர்றா. என்ன மீனா இது கோலம்.. பயந்தே போயிட்டேன்னு சொல்றா தனம். நீங்கதானே நைட்டி போடக்கூடாதுன்னு சொன்னீங்க.. இது ஓகேவான்னு கேட்கறா. தனம்.. பாரு முல்லை இவளுக்கு குறும்பைன்னு சொல்லிட்டு வெளியில போயிடறா.

முல்லை

முல்லை

எப்படி முல்லை.. அவுங்க கூட உனக்கு ஒத்து போகுது.. இல்லே நீயும் அப்படித்தானான்னு மூணாவது மருமக முல்லைக்கிட்ட கேட்கறா. அவுக எப்பவும் நல்லதுதான் மீனா சொல்லித் தருவாக. அதனால, எந்த பிரச்சனையும் வந்ததில்லைன்னு சொல்றா முல்லை.

ஜீவா

ஜீவா

என்னடி இது கோலம்னு ஜீவா கேட்க, நீ கேட்கறேன்னு சொன்னியே உங்க அண்ணிகிட்ட ஏன் கேட்கலைன்னு சொல்லும்போதே... நேத்து நான் நைட்டி போட கூடாதுன்னு சொன்னேன்.. அதுக்கு பாரு ஜீவா இப்படி போர்த்திக்கிட்டு நிக்கறான்னு தனம் சொல்லிட்டு போறா. பார்த்தியா இப்பவும் கேட்கலைன்னு கோச்சுக்கறா மீனா.

தர மாட்டேன்

தர மாட்டேன்

ஜீவா அதற்குள் அவளருகில் போய் ஒரு முத்தம் குடுத்துடறான். எதுக்கு இப்போ குடுத்தேன்னு இவள் கேட்க, என் பொண்டாட்டிக்கு நான் குடுத்தேன்னு சொல்றான். பொண்டாட்டியா இருந்தாலும் அனுமதி இல்லாம எதுவும் செய்ய கூடாது ஜீவான்னு சொல்ல, ஜீவா,வேணாம்ல அப்போ திருப்பி குடுத்துருன்னு கேட்கறான். இதென்ன சினிமாவா குடுத்ததை திருப்பி குடுன்னு ரொமான்ஸ் பண்ணன்னு கேட்கறா

English summary
Pandian Stores story is aired on Vijay TV and teaches the tradition of ancient tradition and how to live as a joint family.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X