Nayagi Serial: குடிப்பழக்கம் எப்படி எல்லாம் யோசிக்க சொல்லுது...!
சென்னை: சன் டிவியின் நாயகி சீரியலில் ஒரு குடும்ப தலைவனின் குடிப் பழக்கம் மாப்பிள்ளையிடம் குடிக்கு பணம் கேட்கும் அளவுக்கு கொண்டு விட்டிருக்கிறது.
குடும்பத் தலைவி சற்குணமா நடிகை அம்பிகா நடிக்கறாங்க. இவங்க புருஷன்தான் தினம் குடிக்கறவர்.
குடிக்கறதுக்கு மகன் மருமகள் என்று யாரிடமும் கூச்ச நாச்சமில்லாமல் பணம் கேட்பவர்.
புதுமாப்பிள்ளை சீர்
வீட்டுக்கு பெண்ணும் மாப்பிள்ளையும் பொங்கலுக்கு புதுத் தம்பதியாக வந்திருக்கிறார்கள். அம்மா சற்குணம் புடவை, வேஷ்டி சட்டை நகைகள் வச்சு சீர் கொடுக்கறாங்க. இவர் தன் பங்குக்கு ஒரு லெட்டர் எழுதி மாப்பிள்ளைக்கு கொடுக்கிறார். உனக்கு கூட பொறுப்பு இருக்குய்யா என்று சற்குணம் புருஷனை பாராட்டிக்கறாங்க.
தனியா பிரிச்சு
லெட்டரை தனியா பிரிச்சு படிங்க மாப்பிள்ளைன்னு சொல்லி சொல்லி அனுப்பறார் மாமா. மாப்பிள்ளையும் தனியா இருக்கும்போது மேகலாவுடன் சேர்ந்து லெட்டரை பிடிச்சு படிச்சு பார்த்தால், பொங்கலுக்கு ஒயின் ஷாப் லீவு. முன்கூட்டியே சரக்கு வாங்கணும்.. நாலு நாளைக்கு உண்டான காசு கொடுங்கன்னு கேட்டு லெட்டர் எழுதி இருக்கார்.
காமெடி பீசு
இதை படிச்சுட்டு, சற்குணத்துக்கு தெரிவித்தால் என் உயிருக்கு உத்தரவாதம் இல்லைன்னு காமெடி வேற. குடிக்கற ஒரு கெட்ட பழக்கம், அதுக்கு காசு இல்லைன்னா மட்டும் எப்படி எப்படி எல்லாம் யோசிக்க வைக்குது பாருங்க. இது காமெடி.. இதுவே கொஞ்சம் வல்கரா போனால்? இதுவே கொஞ்சம் பயங்கரமாக போனால்?
நடக்கக் கூடாதது எல்லாம் நடக்கும்!
நீதி நேர்மை
நீதி நேர்மைன்னு சொல்லி பெத்த பையன் மருமகளை ஒதுக்கி வச்சு இருக்காங்க சற்குணம். குடிகார புருஷனை நினைச்சா அவங்களால திருத்த முடியாத? அதையும் ஒரு காட்சி வையுங்களேன்.. கதைக்காக என்று மட்டும் ஒரு குடும்பத்த தலைவனை இப்படியா அசிங்கப்படுத்துவீங்க?