Eeramana Rojave Serial: கருப்பு போர்வையுடன் கையில் கொம்பை எடுத்துக்கிட்டு...!
சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியல் நல்ல குடும்பப்பாங்கான கதை என்றாலும் சில துளிகள் மட்டுமே வன்முறை. அதனால்தான் இந்த சீரியலை பார்க்கும் வயதானவர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள்.
கணவன் மனைவி என்று இரண்டு ஜோடிகளை பிரித்து வைத்து இருக்கும் போது என்னென்ன குறும்புகளை வீட்டுக்குத் தெரியாமல் இருவரும் செய்வார்களோ அதை நன்றாக காண்பித்து இருக்கிறார்கள்..
இதுவும் பெரியவர்களுக்கு தங்களது அந்த காலத்தை நினைவு கொண்டு வருவதாக இருக்கிறது. அவர்களுக்கு இந்த சீரியலை பார்ப்பதே ஜாலியாக இருக்கிறது என்றால் பாருங்களேன். .
எழுந்திரிடா திருடன்
வாசலில் படுத்து இருந்த வேலைக்காரனை மலரின் அப்பா,எழுப்பி களவாணிப் பய வூட்டுக்கு வந்துட்டான் போல இருக்குடா. கொம்பு, இன்னும் எதெது கையில் கிடைக்குதோ அதெல்லாம் எடுத்துட்டு வாங்கன்னு சொல்றார். இந்த சத்தத்துல வீட்டில் எல்லாரும் முழிச்சுகிட்டு கத்தறாங்க.
போடாதீங்க சத்தம்
யாரும் சத்தம் போடாதீங்க.அப்பத்தா நீயும் உன் மருமகளும் கையில கிடக்கும் எதையாவது எடுத்துட்டு வாங்க.களவாணி பய கையில கிடைச்சா போட்டு தள்ளுங்கன்னு சொல்றான். ஆளுக்கொரு போர்வையை எடுத்துக்கிட்டு, தலையை மறைச்சுக்கிட்டு கிளம்பறாங்க, களவாணிப பயலை பிடிக்க.
அப்பா மலர்
மலரின் அப்பா கொல்லை புற ரீப்பர் வழியாக பார்க்க, அங்கு தனது மகளும், மருமகனும் ஆசையா கிணத்தடியில் பேசிகிட்டு நிக்கறாங்க.இவர் தலையில் இருந்த போர்வையை எடுத்துவிட்டு சிரிச்சுகிட்டே நிற்கிறார்.எலே ராஜப்பா களவாணியைப் பிடிக்கறேன்னு சொல்லி ட்டு சிரிச்சுக்கிட்டு நிக்கறேன்னு பாட்டி கேட்க, இங்கே வந்து பாரும்மா.களவானியா , புருஷன் பொண்டாட்டியான்னுன்னு சொல்றார்.
ஒரே சிரிப்பு
பார்த்தா எல்லாரும் சிரிக்கறாங்க. போங்க எல்லோரும் போயி படுங்க. ஏலேய் மணி குறட்டை விட்டு தூங்கி வீணா மாப்பிள்ளை,பொண்ணுக்கு பேசறதுல தொந்திரவு குடுக்க கூடாதுன்னு சொல்லிட்டு போறார். கூடிய சீக்கிரம் செய்ய வேண்டிய சீர் செனத்தியை சரியா செய்து வாழ வைக்கிறேன்மான்னு அப்பா சொல்லிக்கறார்.