Eeramana Rojave Serial: துள்ளித் திரிந்த பறவைகளை துடிக்க வச்சுட்டாங்க!
சென்னை: வீட்டில்தான் வரதட்சணை சீர் செனத்தி என்று புருஷன் பொண்டாட்டியை பேச விடலை. இதில் மருமகள்களை பிறந்த வீட்டுக்கு அனுப்பியும் வச்சாச்சு.
இன்னும் பிள்ளைகள் ரெண்டு பேரும் தன் கட்டுப்பாட்டில் இருக்கணும்னு நினைக்கறாங்க அம்மா. இவங்களுக்கு சொல்லிக் குடுக்க நாத்தனார் பவுனு, ஈசுன்னு ரெண்டு பேர்.
இவங்க ரெண்டு பேரும்தான் மலர் வெற்றி,அகிலா புகழ் ரெண்டு ஜோடிகளை வீட்டுக்குத் தெரியாமல் ஏற்காடு ஜாலி ட்ரிப் போயுள்ளதை பத்த வச்சுடறாங்க.
விஜய் டிவி சீரியல்
விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் மருமகள்கள் மலர், அகிலா மகன்கள் வெற்றி, புகழை கல்யாணம் செய்துகிட்டு ஒண்ணு சேராமத்தான் வாழ்ந்துகிட்டு இருக்காங்க. ஏதோ துணி வாங்கின கடையில் குலுக்கலில் மலர் வெற்றி ஜோடிக்கு ஏற்காடு டூர் வாய்ப்பு கிடைக்க, கூடவே அகிலாவையும், புகழையும் கூட்டிகிட்டு கிளம்பறாங்க.
ஆட்டம் பாட்டம்
போன இடத்தில் வாத்தியார் பாட்டுக்கு ஆட்டம், நம்மவர் பாட்டுக்கு ஆட்டம்னு ஜோடிகள் கொண்டாட்டமா இருந்தாங்க. இன்னும் சமையல் போட்டி, மலை ஏறுதல்னு பல போட்டிகளில் ஜோடிகள் நெருங்க நல்ல வாய்ப்பு கிட்டியும், இன்னும் தயங்கித் தயங்கி ஐ லவ் யூ சொல்லலாம்னு முடிவுக்குத்தான் வந்து இருக்காங்க.
முக்கியமான விஷயம்
மலர் ஆரம்பிக்கிறாள், மாமா உங்ககிட்ட முக்கியமான ஒரு விஷயத்தை இப்போ சொல்லிடணும் மாமான்னு சொல்றா. சொல்லு மலர் என்னது அதுன்னு ஆசையா கேட்கிறான் வெற்றி. மலர் மனசுக்குள்ள ஐ லவ் யூன்னு சொல்லலாமா, இல்லை உங்களை நான் விரும்பறேன்னு தமிழில் சொல்லிடலாம்ணு தனக்குள்ள பேசிகிட்டு டைமை வேஸ்ட் பண்றா.
தமிழில் சொல்ல
ஒரு வழியா தமிழில் சொல்ல முடிவெடுத்து உங்களை மாமா உங்களை நான் என்று சொல்ல என்னை சொல்லு மலர்னு அவன் கேட்க.போன் வருது. போனில் அம்மா.யாரு மாமா போன்லனு மலர் கேட்க.. அம்மா மலர் அதை அப்புறம் பேசிக்கலாம். நீ முதலில் சொல்ல வந்ததை சொல்லுன்னு கேட்க, அவள் மறுபடியும் உங்களை உங்களைன்னு இழுக்கறா.
மறுபடியும் போன்..அதில் அம்மா.. எடுத்து பேசுங்கன்னு சொல்றா மலர். எடுத்தா பொண்டாட்டி கூட உல்லாசமா இருக்கியான்னு அம்மா கழுவி கழுவி ஊத்தறாங்க. பயத்தில் இருக்கான் வெற்றி.