For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Eeramana Rojave Serial: இவர் எங்க வீட்டு உங்க வீட்டு மாப்பிள்ளை இல்லங்க சூப்பர் மாப்பிள்ளை!

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் வரதட்சணை கொடுமை, கடன் வாங்கியதில் பிரச்சனை என்று, மருமகள்களை மாமியார் அவமானமாக பேசி, பிறந்த வீட்டில் விட்டுட்டு போயிடறாங்க.

அக்கா, தங்கை,அண்ணன் தம்பியை கல்யாணம் செய்து கொண்டதால் இரு பெண்களுமே வாழா வெட்டியாக வந்து இருப்பது, ஊருக்கே தெரியும்படி சம்பந்தி அம்மா அவமானமாக பேசியது என்று குடும்பமே துக்க வீடாக இருக்கிறது.

இதில் கல்யாணம் ஆகாத கடைசி தங்கச்சிக்கு பசி தாங்க முடியலை. அவள் பசிக்குது என்று சொல்லியும் அம்மா, பாட்டி, அப்பா என்று யாரும் கண்டு கொள்ளவில்லை.

Ayudha Ezhuthu Serial: கல்லுக்குள்ளேயே ஈரம் இருக்கு...காளி அம்மா மனசில் இருக்காதா? Ayudha Ezhuthu Serial: கல்லுக்குள்ளேயே ஈரம் இருக்கு...காளி அம்மா மனசில் இருக்காதா?

மலர் அகிலா

மலர் அகிலா

அகிலா மொபைல் எடுத்து ஆப்ல ஃபூட் ஆர்டர் பானு, இன்னிக்கு யார் பசிக்கலேன்னாலும் நாம்தான் கட்டாயப்படுத்தி சாப்பிட வைக்கனும்னு அக்கா மலர் சொல்ல, அகிலாவும் ஆர்டர் பண்றா. மறுபடியும் அதையே நினைச்சு அழுதுகிட்டு இருக்காங்க. இந்த நேரத்தில் காலிங்க் பெல் அடிச்சுட்டு ஃபூட் டெலிவரிங்கன்னு குரல் வருது. அகிலா பணத்தை எடுத்துக்கொண்டு வெளியில் வர,அங்கே வந்து நிற்பது அகிலாவின் புருஷன் புகழ்.

பணத்தை கொடுத்து

பணத்தை கொடுத்து

பணத்தை கொடுத்து, உணவை அகிலா வாங்கிக்கறா. பணம் வேணாம்னு புருஷன் சொல்ல, யார் பணத்திலும் சாப்பிட்டு நாங்க இனிமேலும் மானத்தை இழக்க விரும்பலைன்னு சொல்றா.புகழ் வாங்கிக்கறான்.அப்படியே சென்று விடாமல் வீட்டுக்கு உள்ளே வந்து மாமனார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு,சாப்பிட சொல்றான்

உணவு மாமனார்

உணவு மாமனார்

மாமனார் சாப்பிடமால் அழுதுக்கொண்டே இருக்க, நீங்க சாப்பிடலேன்னா குடுங்க மாமா நான் ஊட்டி விடறேன்னு சொல்லி வாங்கி, எங்க அப்பாவுக்கு கூட நான் ஊட்டி விட்டத்தில்லை மாமா தயவு செய்து சாப்பிடுங்க.எல்லா தப்பும் எங்க வீட்டு ஆளுங்க மேலதான்.அவங்களுக்காக உங்ககிட்ட மன்னிப்பு கேட்கறேன்னு சொல்லி மாமனாருக்கு மருமகன் சாப்பாடு ஊட்டி விடறான்.

சந்தோஷம் மாமனார்

சந்தோஷம் மாமனார்

மாமனார் மிகுந்த சந்தோஷத்தில் எல்லாரையும் சாப்ப்பிடுங்க என்று சொல்ல, புகழ் மனைவி அகிலாவுக்கு ரொம்ப சந்தோசம்.அவளை கல்யாணம் செய்துகொண்டு, பிடிக்காமல் தினம் குடி கூத்து என்று இருந்தவனை திட்டி திட்டி, அகிலாதான் வேலைக்கு போக வைத்தவள்.

பெருமையாக புருஷனை

பெருமையாக புருஷனை

புருஷனை பெருமையாக பார்க்கிறாள் அகிலா. அகிலாவை தனியாக அழைச்சு, வீட்டில் எல்லாரையும் நல்லா பார்த்துக்கோன்னு சொல்லிட்டு போறான். வீட்டிலிருந்த இறுக்கத்தை சில மணித் துளிகளில் காணாமல் போகச் செய்த இந்த மாதிரி மாப்பிள்ளை கிடைக்க குடுத்து வச்சிருக்க வேணாமா?

English summary
Vijay TV's eeramana rojave d serial dowry harassment, borrowing problem, mother-in-law taunting mother-in-law and leaving home at birth
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X