For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Eeramana Rojave Serial: இன்னுமா இப்படி கொடுமைகள் நடக்குது?

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் சீர், செனத்தி, வரதட்சணை கொடுமை என்று, வீட்டுக்கு வந்த மருமகள்களை பிறந்த வீட்டுக்கே அனுப்பி வைத்துவிடுகிறார்கள்.

நாட்டரசன் வீட்டுக்கு தனது இரு மகளையும், அவரின் இரண்டு மகள்களுக்கும் கல்யாணம் செய்து கொடுத்த அவரும் நல்ல வசதிதான்.

பணத்துக்கு ஒன்றும் குறை இல்லாமல், வீடு வாசல், தோட்டம் என்று நல்ல விவசாய குடும்பம்தான். ஆனால், ஏலத்தில் போட்டி வர.அதிக ஏலத்தில் குத்தகைக்கு எடுத்துவிட்டு பணம் இல்லாமல் அவஸ்தைப் படுகிறார் பெண்ணைக் கொடுத்தவர்.

Naam iruvar namakku iruvar serial: தாமரை அரவிந்தை விட்டுட்டு வேற கல்யாணமா? செய்துப்பாளா? Naam iruvar namakku iruvar serial: தாமரை அரவிந்தை விட்டுட்டு வேற கல்யாணமா? செய்துப்பாளா?

சம்பந்தி உதவி

சம்பந்தி உதவி

சம்பந்தி வீட்டாரான நாட்டரசன், இருபது லட்சம் ரூபாய் பணம் நான் குடுக்கறேன்னு சொன்னாலும், தோட்டத்து பத்திரத்தை அடமானம் வச்சுக்கிட்டு, வட்டிக்கு பணம் தாங்கன்னுதான் சம்பநிதி கேட்கறார். ஆனால், இவர்தான் உங்களுக்கு போயி வட்டிக்கு பணம் தர்றதான்னு வீட்டு பொம்பளைங்களுக்கு தெரியாம இருபது லட்சம் ரூபாய் பணமும், அவர்கள் சார்பாக வரதட்சணை கொடுக்க தாங்களே பணமும் கொடுத்து அனுப்புகிறார்கள்.

அஞ்சலி வெற்றி

அஞ்சலி வெற்றி

வெற்றியை விரும்பிய அஞ்சலி, வெற்றி அம்மாவிடம் இப்படி உங்க பிள்ளைங்களுக்கு குடுக்க வேண்டிய வரதட்சணை பணத்தை, நீங்களே குடுத்து ,உங்க மருமகள்களை அழைச்சுக்கிட்டு வந்து இருக்கீங்க...நீங்க கிரேட் அத்தைன்னு நைசா போட்டுக் கொடுத்துடறா. அப்போதுதான் விஷயம் தெரிந்த அத்தையும், நாத்தனார்களும் நேராக சம்பந்தி வீட்டுக்கு நடந்து போயி, வெளியில் நின்நு அசிங்கம் அசிங்கமா திட்டிட்டு, அவங்க மானம் போற மாதிரி ஊரே வேடிக்கை பார்க்கும்படி செய்துட்டு வர்றாங்க.

சோகத்தில் குடும்பமே

சோகத்தில் குடும்பமே

மலர், அகிலா குடுமபமே பட்ட அவமானத்தால் கூனிக் குறுகி அழுதுகிட்டு இருக்காங்க. வீடே துக்க வீடு போல கிடக்கிறது. பேசாமல் விஷத்தை சாப்பிட்டு செத்து போயிடலாம்னு பாட்டி சொல்றாங்க. மலரின் அப்பா நான் கடனாதான் கேட்டேன்... இப்படி வீட்டுக்கு தெரியாம குடுத்து, அவங்க நம்மை அவமானப் படுத்திட்டாங்களேன்னு அழறார்.

பெண்கள் இப்படியும்

பெண்கள் இப்படியும்

பெண்கள் இப்படியும் இருப்பார்களா என்று நினைப்பது போல வெற்றியை காதலிச்ச அஞ்சலி, இன்னும் வெற்றியை கல்யாணம் செய்துக்க நினைக்கிறாளாம். அவனுக்குத்தான் மலரை கல்யாணம் செய்து, இப்போது வீட்டுக்கு அனுப்பி வச்சுட்டாங்க. இதற்கு அந்த நாத்தனார் அஞ்சலிக்கு போன் செய்து, அஞ்சலி உன் ஆசை சீக்கிரம் நிறைவேறும். மலரை அவ வீட்டுக்கு அனுப்பியாச்சு. இனி அவ்ளோ பணத்தை அவங்க அப்பனால புரட்ட முடியாது.

நீதான் இனி இந்த வீட்டு மருமகள்னு போனில் சொல்றா.. இன்னுமா பெண்கள் இப்படி இருக்காங்க?

English summary
Vijay TV's eeramana roseware serial, senathi, dowry torture, homecoming nephews are sent home.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X