Pandian stores serial: அப்பபாடி அவிங்களே ஃபைனல் போட்டுட்டாய்ங்க!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் முல்லைக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வானா மாட்டானான்னு எதிர்பார்த்து ஒரு வாரம் போச்சு
ஒரு வாரத்துக்கும் மேல விஜய் டிவியில் பிறந்த நாள் வாழ்த்து சொல்வதை ப்ரோமோ போட்டு போட்டு சீரியல் ஆர்வலர்களின் ஆர்வத்தை தூண்டி விட்டுகிட்டு இருந்தாங்க.
ஒரு வழியா இன்னிக்கு அவிங்களே ஃபைனல்னு ட்வீட்டர்ல போட்டு இருக்காய்ங்க.
முல்லை கதிர்
பிறந்த நாளில் வாழ்த்து சொல்லிடணும்னு முல்லை வீட்டுக்கு போறான் கதிர். அங்கே போனால் முல்லை வெளியில் வரலை. ஏமாற்றத்துடன் வீட்டுக்கு வர்றான். வீட்டுக்கு வந்தால் எங்கு பார்த்தாலும் முல்லை உருவம் தெரியுது.
பார்த்தாலும் முல்லை
என்ன முல்லை வீட்டுக்கு வந்துட்டியான்னு கேட்க, சட்டுன்னு முல்லை மறைஞ்சு போறா. என்னடா இது கனவான்னு நினைச்சுக்கறான். உள்ளே ரூமுக்கு போறான். கட்டிலில் உட்கார்ந்து இருக்கா. என்னடா எங்கு பார்த்தாலும் இன்னிக்கு இவளா தெரியறான்னு படுத்துக்கறான்.
முல்லைதான் நிஜமா
ஆனால் நிஜமாவே முல்லைதான் கட்டிலில் உட்கார்ந்து இருக்கா. கோவத்தில் திரும்பி படுத்துக்கறா. இன்னிக்கு 12 மணி முடியறத்துக்குள் எப்படியும் பிறந்த நாள் வாழ்த்து சொல்லிடணும்னு நினைக்கறான். 12 ஆவதற்குள் எழுந்து முல்லைன்னு கூப்பிடறான்.
முல்லை எழுந்து
முல்லை எழுந்து கதிரை பார்க்கிறாள் மெதுவாக கையை நீட்டி பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று சொல்றான். . 12 மணி முடியறதுக்குள்ள சொல்லிடணும்னு நினைச்சேன். சொல்லிட்டேன்னு சொல்லிட்டு, இந்த வருஷம் உன் வாழ்க்கை நீ நினைச்ச மாதிரி அமையனும் முல்லைன்னு சொல்றான். இவள் புன்னகை பூக்கும் முகத்துடன் கதிரை பார்க்கிறாள்.
அப்பாடி ஒரு வழியா முடிச்சு வச்சுட்டாங்க.. இல்லை இதுவும் ப்ரோமோதானா பார்ப்போம்.. இன்று இரவு 8 மணிக்கு!