அஞ்சலிக்கு நிச்சயதார்த்தமா... ஒரு அப்பாவா உங்களை... கூப்பிடலை?
சென்னை: சன் டிவியில் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் சந்திரகுமாரி. இந்த சீரியலில் சந்திராவாக முதலில் ராதிகா நடித்திருந்தார்.
இப்போது சந்திராவாக விஜி சந்திரசேகர் நடிக்கறார். இவங்க பொண்ணுதான் அஞ்சலி.. அப்பா நீலகண்டன் சந்திராவை விட்டுட்டு ருத்ரா கூட வாழ்ந்துகிட்டு இருக்கார்.
இதுலதான் குடும்பத்தில், பிளவு ,பிரிவுன்னு உண்டாகுது. இனி இந்த சீரியலில் நடக்கும் எதுவும் புதுசா இருக்காதுன்னுதான் தோணும்.
நிலாவும்... சந்திராவும்... ஸ்வேதாவின் கோவம் இதுக்குத்தானா... கடவுளே...!
குடும்பத்தை சுத்தி
வப்பாட்டின்னு ஒருத்தி இருந்தா, பொண்டாட்டிக்கும், அவளுக்கும் சண்டை..இதனால் பிள்ளைகளுக்கு அவமானம்...இப்படித்தான் வாழ்க்கை இருக்கும். இதை பிரதி பலிக்கறதாத்தான் சந்திரகுமாரி சீரியலும் இருக்கு.
என்னை விட்டு
அஞ்சலி அப்பா கூட பேச ஆரம்பிச்ச உடனே,அம்மாவுக்கு பொண்ணு எங்கே தன்னை விட்டு போயிடுவாளோன்னு பயம் வந்துருது. இதனால அம்மாவுக்கும், பொண்ணுக்கும் மிஸ் அண்டர்ஸ்டாங்டிங்...
பார்க்க வர்றவங்க
அஞ்சலிக்கு கல்யாணம் பண்ணி வச்சுடலாம்னு மாப்பிள்ளை வீட்டாரை வர சொன்னா,அப்பா எங்கேன்னு கேள்வி...இதனால் பொண்ணு கல்யாணத்தை வெறுக்கறதுன்னு பார்க்கறவங்க புத்திக்கு உரைக்கற மாதிரிதான் கதை போகுது.
பாசம்
அப்பா மேல அஞ்சலி பாசம் வச்சிருக்கறது.. அவரைப் பார்க்க போறது அஞ்சலி அம்மாவுக்கு பிடிக்கலை.எனக்கு அப்பா வேணும்னு கேட்கறா அஞ்சலி. அப்பாவுக்கு என் மேல பாசம் இருக்கும்மான்னு ஆர்கியூ பண்றா..
நடிப்பு
அப்பா உன் மேல காட்டற பாசம் வேஷம், நடிப்புன்னு அம்மா சொல்றாங்க.ருத்ரா எதோ திட்டம் போடறா..உன்னை என்கிட்டே இருந்து பிரிச்சு என்னை அனாதையாக்கணும் அவங்களுக்குன்னு சந்திரா சொல்றாங்க.
நான் மாட்டேன்
என் நிச்சயதார்த்ததுக்கு அப்பா வரணும்மான்னு அஞ்சலி அம்மாவின் அனுமதி கேட்கறா. தாராளமா வரட்டும்..ஆனா நான் வர மாட்டேன்னு சந்திரா சொல்ல, கடைசியில அப்பா வர கூடாதுன்னு முடிவு பண்ணிடறாங்க.இங்க ருத்ரா கேட்கறா..பெத்த பொண்ணு நிச்சயதார்த்தத்துக்கு உங்களை கூப்பிடலையான்னு கேட்டு ருத்ரா கேலி பண்றா.
இப்படிப் போகுது சந்திரகுமாரியில் சந்திரா, அஞ்சலி, நீலகண்டன் வாழ்க்கை...