Barathi Kannamma Serial: படிக்காதவர்னாலும் இப்படித்தான் இருக்கோணும்!
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவுக்கு குழந்தை பிறக்காது என்று டாக்டர் வெண்பா பொய்யான ரிப்போர்ட் கொடுத்துடறா,
அதையும் நம்பி இதுதான் சாக்கு என்று மாமியார் சவுந்தர்யா அம்மா கண்ணம்மாவை அவங்க அப்பாவை அழைத்து கண்ணம்மாவை கையோடு அம்மா வீட்டுக்கு அனுப்பி வச்சுடறாங்க.
அவங்க அப்பா படிக்காதவர் என்றாலும், வெண்பாவிடம், என் பொண்ணுக்கு நீ பொய்யான ரிப்போர்ட் குடுத்து இருக்கே.. வேற டாக்டர் கிட்டே காண்பிச்சு. இது பொய்யான ரிப்போர்ட்ன்னு நிரூபிக்கறேன்னு சொல்றார்.
செகண்ட் ஒப்பீனியன்
ஒரு மேஜர் ஆபரேஷன் நடக்க வேண்டும் அல்லது ஒரு மேஜர் விஷயத்துக்கு ஒரு மெடிக்கல் ரிப்போர்ட் வந்திருக்கிறது என்றால் மெடிக்கல் ரிப்போர்ட்டில் செகண்ட் ஒப்பீனியன் எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதை எடுக்காமல் பொய்யை நம்பி அழுது கொண்டு இருக்கிறாள் கண்ணம்மா. அதை நம்பி வீட்டை விட்டு அனுப்பறாங்க மாமியார்.
படிக்காத அப்பா
படிக்காத அப்பா பொங்கி எழறார். வெண்பாவை பார்த்து, என் பொண்ணுக்கு நீ பொய்யா ரிப்போர்ட் கொடுத்து இருக்கே. என்னால அதை நிரூபிக்க முடியும். யாரோட பேச்சை கேட்டு இதை நீ செய்திருக்கே? சவுந்தர்யா அம்மா பேச்சை கேட்டு இதை செய்தியா இல்லை பணத்துக்காக இதை செய்தியான்னு சத்தம் போடறார்.
இது போய்
இன்னொரு டாக்டரை பார்த்து என் பொண்ணு குழந்தை பெத்துக்க முடியாதுன்னு நீ குடுத்த சர்ட்டிஃ பிகேட் பொய்னு நிரூபிச்சு, நீ இனிமே மருத்துவம் பார்க்க முடியாம செய்யறேன் பாருன்னு சொல்லிட்டு போறார்.படிக்காதவர் என்றாலும் இந்த விழிப்புணர்வு எல்லாருக்கும் வரணும்.
பாரதிக்கு தெரியலை
இத்தனை நடக்குது.. எதுவும் பாரதிக்கு தெரியலை. புருஷனுக்கு தெரியாமல் எதுவும் நடக்க கூடாது என்பது பெண்களுக்கு ஒரு பாடம். வெண்பா, குழந்தை பிறப்பு டீசர் செய்வதை பாரதிக்கு தெரிய வேண்டாம் என்று சொல்லும்போது கண்ணம்மா சரி என்று ஒத்துக் கொள்வது என்பது இதில் தப்பான விஷயம் இது புது மணப் பெண்களுக்கு ஒரு பாடம்.