சீரியல்களில் சீரியஸாக உலா வரும் சித்தர்கள்.. எப்பப்பா விடுவீங்க அவர்களை!
சென்னை: இப்போதைக்கு சன் டிவி சீரியல்களில் சித்தர்கள் அருள் வாக்கு என்று கதை போக்கை கொண்டு செல்ல தொடங்கி இருக்காங்க.
இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ரகுவம்சம் சீரியல் மர்மங்கள் நிறைந்ததாகவும் சித்தர்களுடன் தொடர்பு உடையதாவும் இருந்துச்சு.
இதுக்கு பிறகு இதை ஆரம்பிச்சு வச்சவர் ராதிகா. இவரின் அண்ணாமலை சீரியலில் சித்தர் அடிக்கடி வருவார். சித்தி சீரியலில் நடிகர் சிவகுமார் சித்தர் மாதிரி வாழ்வார்... இதுவும் கடந்து போகும்னு அடிக்கடி வாக்கு சொல்வார்.
இப்போது சன் டிவியின் நாயகி சீரியல் ஆரம்பித்த சில நாட்களில் இருந்தே ஆனந்திக்கு சித்தர் வந்து வாக்கு சொல்ல ஆரம்பிச்சுருகார்.
சன் டிவி இந்த ஃபார்முலாவை இறுக்கி பிடிச்சுக்கிட்டாங்களே...!
இப்போது மதிய நேர சீரியலான கல்யாண பரிசு சீரியலிலும் சித்தர் தலைகாட்ட துவங்கி இருக்கார். வித்யா கல்யாணத்தில் நடக்க இருக்கும் சிக்கலை வித்யாவின் அம்மாவுக்கு அருள் வாக்கு போல சொல்லி இருக்கார்.
ரகு வம்சம், அண்ணாமலை சீரியல்களில் சித்தர்கள் வாக்கு சொன்னது கதையோட ஒட்டிய போக்கா இருந்துச்சு. நாயகி, கல்யாண பரிசு சீரியலில் சித்தர் தலைகாட்டி இருப்பது...
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் இருக்கும்... கதையின் இந்த போக்கையும் ஏத்துக்கலாம்...தப்பில்லை!