அடடா பாப்பா கேட்டதுல ஜூஸ் மாறிப்போச்சே.... ஐயோ மருந்து.. என்ன நடக்குமோ!
சென்னை: சன் டிவியின் மகாலட்சுமி சீரியலில், மகாலட்சுமி மாதிரி மகாலட்சுமி ரொம்ப அழகா இருக்காங்க. இவங்க குடும்பத்துல கல்யாணம் நடக்க இருக்கு.
குடும்பத்துக்கு எப்பவுமே குடும்பத்துலயே எதிரி இருப்பங்களே.. அப்படி குடும்பத்துல பொறந்த பொண்ணும் அவங்களுக்கு பிறந்த பொண்ணும் எதிரியா இருக்காங்க.
கிராமத்து கோயிலில் நிச்சயதார்த்தம் நடக்குது நீங்களும் வாங்கன்னு எதிரிங்கன்னு தெரியாம அவங்ககிட்ட சொல்ல வர்றா மகாலட்சுமி ஒரு பெண் குழந்தையுடன். வந்தவங்களுக்கு மருந்து கலந்த ஜூஸ் குடுக்க தயார் பண்ணி வைக்கறாங்க அம்மாவும், பொண்ணும். ஏன்னா நிச்சயத்துக்கு மகாலட்சுமி வர கூடாதாம்.
ஹய்யா... முல்லை கதிருக்கு சாப்பாடு போடறாளே... சேர்ந்துருவாங்களா?
குடிக்கலை
என்னம்மா நீங்க.. எங்களுக்கு ஜூஸ் குடுத்துட்டு, நீங்க குடிக்கலையான்னு மகாலட்சுமி கேட்கறா. இல்லை.. எங்களுக்கு வேணாம் நீங்க குடிங்கன்னு சொல்றாங்க அம்மாவும், பொண்ணும். அதெல்லாம் முடியாது, உங்களுக்கும் எடுத்துட்டு வாங்க. நானும் பாப்பாவும் அப்போதான குடிப்போம்னு சொல்றா மகாலட்சுமி.
ரெண்டு ஜூஸ்
மகள் தனக்கும், அம்மாவுக்கும் ரெண்டு தம்ளரில் ஜூஸ் எடுத்துட்டு வர்றா. இந்த பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்கறதுன்றது எவ்ளோ கஷ்டம்னு மகாலட்சுமி பேசிக்கொண்டே ஜூஸ் குடிக்கப் போக, அம்மா எனக்கு ஒரு சந்தேகம்.. அதை சொன்னீங்கன்னா ஜூஸ் குடிக்கலாம்.
கேளு சொல்றேன்
அம்மா பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்கறதுன்னா என்னன்னு கேட்குது குட்டி பாப்பா. உடனே மகாலட்சுமி உனக்கு புரியற மாதிரி எப்படி சொல்றதுன்னு.. நாலு ஜூஸ் தம்ளரையும் டேபிளில் வைக்க சொல்லி, இப்படி மாத்தி, அப்படி மாத்தி குறுக்க மாத்தி, நெட்டுக்க மாத்தி கதை சொல்லி இதுதான் பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்கறதுன்னு விளக்கம் சொல்றா மகாலட்சுமி.
ஆப்பு
இப்போ எந்த தம்ளர் ஜூஸில் உடலை கெடுக்க கலந்திருந்த ஜூஸ் இருக்குன்னு தெரியலை அம்மாவுக்கும், பொண்ணுக்கும் பயம். ஜூஸை குடிச்சுட்டு வைத்தியரிடம் போயி எந்த ஜூஸில் மருந்து இருந்துச்சுன்னு தெரியலைன்னு படபடக்க என்னால ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சொல்றார் வைத்தியர்.
இதைத்தான் தங்களுக்கு தானே வச்சுக்கற ஆப்புன்னு சொல்றது.