குடும்ப நன்மைக்காக செம்பாவை கூட்டிட்டு வர வேணாம் கார்த்திக்... அப்பா கடிதம்!
சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் ஜோடிகள் சிங்கப்பூரில் இருந்து திரும்பி வந்துட்டாங்க.
வீட்டுக்கு வந்தா, வீடு பூட்டி கிடக்கு. சாவியை பக்கத்து வீட்டுல கேட்டு வாங்கி எல்லாரும் வீட்டுக்குள்ள போறாங்க.
சாமிகிட்ட கார்த்திக்கின் அப்பா கார்த்திக்குக்கு கடிதம் எழுதி வச்சிருக்கார்.அதை எடுத்துட்டு வந்து செம்பா புருஷன் கார்த்திக் கிட்ட குடுக்கறா.
உன் குத்தமா... என் குத்தமா... யாரை இதில் குத்தம் சொல்ல?
என்ன எழுதி இருக்கு?
கடிதத்தில் வீட்டுக்கு குருஜி வந்ததாகவும், கிராமத்தில் இருக்கும் குல சாமிக்கு 11 நாள் விளக்கேத்தி விரதம் இருந்து பொங்கல் வைக்கணும்னும் குருஜி சொன்னதாக எழுதி இருக்கார்.
எல்லாரும்
செம்பாவைத் தவிர எல்லாரும் கிளம்பி வாங்க.. உனக்கும்,பெரிய அண்ணனுக்கும் குழந்தை இல்லேன்னுதான் குருஜி இந்த விரதத்தை இருக்க சொன்னார்.குடும்ப நன்மை கருதி செம்பாவை விட்டுட்டு போகணும்னு குருஜி சொன்னதாவும் எழுதி இருக்கார்.
கலக்கத்தில் கார்த்திக்
அந்த கிராமத்தில் இருந்து இவங்க வீட்டுக்கு வேலைக்கு வந்தவதான் செம்பா. ஊருக்கு குலசாமியைப் பார்க்கப் போறோம்னு குதூகலிக்கறா செம்பா. நீ வர கூடாதுன்னு எப்படி செம்பா சொல்லுவேன்னு கலக்கத்தில் இருக்கான் கார்த்திக்.
அதுல சிக்கல்
அதுலதான் ஒரு சிக்கல்னு சொல்றான் கார்த்திக். இதை யாரும் கண்டுக்காம இருக்காங்க. டிரெயின் டிக்கெட் புக் பண்ண பேப்பர் எடுத்துட்டு வர்றா செம்பா. அதுல செம்பா பேரு மட்டும் மிஸ்சிங்.என்ன சின்னய்யா இப்படி பண்ணிட்டீங்கன்னு அந்த பேப்பரை கிழிச்சு போட்டுட்டு, வேற பேப்பர் எடுத்துட்டு வந்து,இதுல முதல்ல என் பேரை எழுதுங்கன்னு சொல்றா. கார்த்திக் முழிச்சுகிட்டு உட்கார்ந்து இருக்கான்.