ஆஹா.. வசிய மருந்து வேலை செய்யுதே.. ஆனா ஜோடி மாறிப் போச்சேய்யா!
சென்னை: சன் டிவியின் விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பில் நாயகி சீரியல் ரொம்ப பிரபலம். இதுல நடிகை அம்பிகா சற்குணமா நடிக்கறது சீரியலுக்கு பெரிய பிளஸ்.
இவங்களோட மகன் செழியன், கண்மணியைக் காதலித்தாலும், காதலை மறைத்து அம்மா பார்த்த பெண் சுஹாசினியைத் திருமணம் செய்துக்க சம்மதிக்கறார். ஆனா, செழியனை காதலித்த கண்மணிக்கு சுஹாசினி நல்ல பெண் இல்லை என்று தெரிய, மாமனாருடன் சேர்ந்து, செழியன் தன்னை கெடுத்துவிட்டதாக நாடகமாடி திருமணம் செய்துக்கறா.
ஒரு கட்டத்துல கண்மணி சொன்னது பொய்னு தெரிஞ்ச்சு வெறுப்பு வருது. பல மாதங்கள் கழித்து, கொஞ்சம் விருப்பமும் வருது. ஆனாலும் மனைவியுடன் ஒன்று சேர மறுக்கிறான் செழியன். ஒரு சூழ்நிலையில கண்மணி கர்ப்பமாக இருக்கான்னு மாமியார் அம்பிகாவிடம் சொல்ல வேண்டிய கட்டாயம்.
பிளாஸ்டிக் ஆடை அணிந்து.. ஒரு நூதன பேரணி.. புதுவையை வலம் வந்த .. "பிளாஸ்டிக் எமன்"!
மாமியார் சந்தோசம்
மருமகள் கண்மணி கர்ப்பம்னு சொன்னதும், கண்மணியை ரொம்ப ஆசையா பார்த்துக்கறாங்க சற்குணம். இப்படி நாட்கள் போக, வயிறு தெரியலைன்னு கேட்பாங்களே எப்படி சமாளிக்கறதுன்னு யோசிக்கறா மருமகள்.
கண்மணி அம்மா
இந்த சமயத்தில்தான் கண்மணியின் அம்மா, ஒரு வைத்தியர்கிட்ட போயி உனக்காக வசிய மருந்து வாங்கிட்டு வந்திருக்கேன்டின்னு கொடுக்கறாங்க.. இதை என்னம்மா பண்றதுன்னு கேட்கறா, உன் புருஷனுக்கு படுக்கும்போது பாலில் கலந்து குடுத்துடு.. அப்பறம் பாரு என்ன நடக்குதுன்னு என்று அம்மா சொல்றாங்க
என்ன செய்வார்
அம்மா என்னம்மா நீ இதை சாப்பிட்டா என்ன நடக்கும், அவர் என்ன செய்வார்னு கண்மணி கேட்க, இவ ஒருத்தி, தலை எழுத்து பெத்த பொண்ணுக்கிட்டயே புரிய வைக்க பாடுபட வேண்டி இருக்கு. நீ அந்த பக்கம் திரும்புடி நான் சொல்றேன்னு சொல்லிட்டு, இதை சாப்பிட்டா செழியன் உன்கிட்ட வந்துருவான்டின்னு வெட்கப்பட்டு சொல்லறாங்க.
நீ கெளம்பு
ம்ம்ம்.. புரிஞ்சிருச்சு நீ கிளம்பும்மா.. இனிமே அவர் என்கிட்டே எப்படி தப்பிக்கறார்னு பார்க்கறேன்னு சொல்றா கண்மணி. எல்லாரும் படுத்த பின்னர் பாலில் வசிய மருந்தை கலந்து தம்ளரில் எடுத்துட்டு படுக்கை அறைக்கு போறா.
பால் குடிங்க
பால் குடிங்கன்னு சொல்றா... வை அப்புறம் குடிக்கறேன்னு சொல்ல, அவன் அருகில் வைத்துவிட்டு, கீழே படுத்துக்கறா கண்மணி. ஒரு மாதிரி கணவனை நமுட்டு சிரிப்புடன் பார்க்க, என்ன அப்படி பார்க்கற, சிரிக்கறன்னு கேட்கறான் செழியன். பாலை குடிங்கன்னு சொல்றா
முழிக்கற
இல்லையே உன் பார்வை சரியில்லையே .. என்னமோ இப்படி முழிக்கற.. பாலில் எதோ கலந்துதானே குடுத்திருக்கன்னு கேட்கறான். எனக்கு எப்பவும் இதே முழிதான், இதே பார்வைதான்.. பாலில் ஒண்ணும் கலக்கலை. குடிங்கன்னு சொல்றா.
இந்த பால்
இல்லை இந்த பால் வேணாம், நானே போய் காய்ச்சி குடிச்சுக்கறேன்னு சொல்லிட்டு, அடுப்பில் இருக்கும் பாலை குடித்துவிட்டு வந்து படுக்கிறான். நீ இப்படி ஏதாவது பண்ணுவேன்னுதான் பால் சட்டி பாலில் வசிய மருந்தை கலந்திருக்கேன்னு மனசுக்குள் சொல்லி சிரிக்கிறாள் கண்மணி.
வரலை ...
செழியன் புரண்டு புரண்டு படுக்க, ஆஹா அவருக்கு தூக்கம் வரலைன்னு சிரிக்கறா. கண்மணி. திடீரென எழுந்து டி ஷர்ட்டை கழட்டுகிறான். ஐயோ பனியனை கழட்டிட்டாரே.. என்கிட்ட வரப்போறார்னு கண்மணி காத்திருக்க, அப்பா இனி நிம்மதியா தூங்கலாம்னு சொல்லிட்டு நல்லா தூங்கறான் செழியன்.
மருந்து?
வசிய மருந்து என்னவாகி இருக்கும்னு அடுப்பங்கரைக்கு போய் பார்த்தா அங்க சற்குணம் அம்மாவின் ரெண்டாவது மருமக சுமதி நிக்கறா. என்னக்கா இந்த நேரத்துலன்னு கேட்கறா. வசிய மருந்து வேலை செய்யல சுமதி. நல்லா தூக்கறார், இந்த சட்டி பாலைத்தான் குடிச்சார் என்னாச்சுன்னு குழம்பறாங்க.
அடுப்பங்கரை
அப்போது செழியனின் தங்கை கையில் தம்ளருடன் அங்கு வந்து, அதை கழுவுகிறாள். என்ன அண்ணி இந்த நேரத்துல இங்க என்ன பண்றீங்கன்னு கேட்க, தம்ளர்ல என்ன எடுத்துட்டு போனேன்னு கேட்கறாங்க ரெண்டு பேரும்.
பால் குடுத்தேன்
அப்பா பால் கேட்டார், வந்து பார்த்தேன். பால் இருந்துச்சு எடுத்துக்கிட்டு, வேற பால் ஊத்தி காய வச்சுட்டு போனேன்னு சொல்றா. என்னது மாமாவுக்கு பால் குடுத்தியான்னு ரெண்டு மருமகள்களும் பதற.. பால்தானே குடுத்தேன் இதுக்கு எதுக்கு இப்படி பதட்டப்படறீங்கன்னு சொல்றா பொண்ணு.
வயசான ஜோடிக்கு
இரு மருமகள்களும் பதற, மாமா கதி என்னவோ என்று சென்று பார்க்கிறார்கள். அவர் அங்கு தூக்கம் வராமல் முறுக்கிக் கொண்டு, சற்குணம்.. இன்னிக்கு நீ அடிச்சாலும் சரி விடமாட்டேன்னு அம்பிகா ரூமுக்கு போய் கதவைத் தட்டுகிறார்.
சிரிப்புதான்...
முதலில் அம்பிகாவிடம் அடிவாங்கும் சத்தம் கேட்க, பிறகு ஆசை வார்த்தைகள்.. இரு மருமகள்களும் சிரித்தபடி ஒளிந்து நிற்கிறார்கள். மறுநாள் காலையில் தலைக்குளித்து துண்டைக் கட்டிக்கொண்டு சாமி கும்பிடும் சற்குணத்தை சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே பாடலை டிவியில் கேட்டுக்கொண்டே மாமியார் சற்குணத்தை காதலுடன் பார்க்கிறார் மாமனார்.
நோ தனிமை
மருமகள்கள் சிரித்துக் கொள்கிறார்கள். ஒரு மருமகள் சொல்றா, இந்த வயசிலும் மாமாவைப் பாருன்னு. அதுக்கு இன்னொரு மருமகளான கண்மணி சொல்றா... எல்லாரும் மனுஷங்கதானேடின்னு. இது எவ்ளோ உண்மை... பெத்தவங்களுக்கோ, மாமனார், மாமியாருக்கோ வயசாயிருச்சுனா அவங்களை நாம தனிமையில இருக்க விடறதில்லை. மனம் விட்டு பேசிக்க கூட ஒரு தனியறை தருவதில்லை.