அச்சோ... கல்யாண பத்திரிக்கையில் தீ பத்திக்கிச்சே!
சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியல் கலகலப்பான திகில் தொடர்னு சொன்னாங்க. கலகலப்பும் திகிலும் ஒண்ணா எப்படி சேர முடியும்?
இப்போதான் கொஞ்சம் கொஞ்சம் திகில் தலைக்காட்டுது. சண்முகம் உடம்புக்குள்ள அருந்ததி பேய் ஆவியா புகுந்துக்குது.
போலியான ருத்திராட்ச காப்பு ஒன்றை போட்டுக்குது. ஆனா, தெய்வானை கழுத்தில் இருக்கும் முருகன் டாலரை அணிந்த தெய்வானையை நெருங்க முடியலை.
உங்களுக்கு பவுர்ணமி மாதிரி பொண்ணு ஓகேவா?
கை காப்பு
காப்பு அணிந்த அம்மாவின் கை தன் தோள் மீது படுவதை பொறுத்துக்க முடியலை. ஆனா,,இவனா தெய்வானையின் கையை பிடிச்சு நடக்கறான்..அப்போ அந்த டாலர் ஒண்னும் பண்ணாதா?
தெய்வானை சண்முகம்
சண்முகம் தெய்வானை இருவரின் கல்யாண பத்திரிகை அச்சடிச்சு வந்துருச்சு. முதல் பத்திரிகையை ரஞ்சனி நம்பூதிரி அம்மாவுக்கு வைக்கணும்னு போறாங்க.கண்ணாலேயே பார்த்து கார் டயரை பஞ்சர் செய்துடறான்
அடுத்த காரில்
வேற காரில் ஏறிப் போகலாம்னு பார்த்தா அடுத்த கார் டோரே ஓபன் ஆகலை. டிரைவரை ஈஸ்வரி அம்மா திட்டிட்டு, சண்முகம் வண்டியில போலாம் வான்னு கூப்பிடறாங்க.
பத்திரிக்கை நம்பூதிரி
பத்திரிக்கை நம்பூதிரி அம்மாகிட்ட போகக் கூடாதுன்னுதான் இந்த வேலை செய்யறேன்.இது புரியாம பைக்ல போகலாமான்னு கேட்கறேன்னு சண்முகம் நற நறன்னு பல்லை கடிக்கறான். கையில காப்பு வேற போட்டு இருக்காளேன்னு புலம்பி, கடைசியில ஆக்சிடென்ட் பண்ணனும்னு ஒரு ஆட்டோவில் இடிச்சுடறான்.
தெய்வானை ஆட்டோவில்
அந்த ஆட்டோவில் தெய்வானை தன் சகாக்களுடன் கூரைப் புடவை எடுக்க போயிகிட்டு ,இருக்க ,சண்முகம் நீ அவங்களோட போ.... நான் ஒரு ஆட்டோ புடிச்சு போயிக்கறேன்னு சொல்லிட்டு ஈஸ்வரி அம்மா நம்பூதிரி வீட்டுக்கு போறாங்க.
பத்திரிகை தீயில்
ரஞ்சனி நம்பூதிரி அம்மா பத்திரிகையை வாங்கிப் படிக்கறாங்க. நல்லாருக்குன்னு சொல்லிட்டு திருப்பி குடுக்க, அந்த பத்திரிக்கை அக்னி குண்டத்தில் விழுந்துருது.ஈஸ்வரி அம்மா பதறிப்போயி நிற்க...
உன் வீட்டுக்குள்ள கெட்ட சக்தி புகுந்துருச்சு... சண்முகத்தை தெய்வானையால மட்டும்தான் காப்பாத்த முடியும்னு நம்பூதிரி அம்மா சொல்றாங்க.