Aranmanai Kili Serial: மீனாட்சி அம்மா விரதமாம்... ஆனா சாம்பாரில் மீனாம்!
சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் மீனாட்சி அம்மா விரதம் இருக்காங்களாம்.
சைவ சாப்பாடுதான் செய்யணும்னு கட்டளை.. ஆனால், சாப்பிட உட்காரும்போது சாம்பாரில் மீன் வந்து விழுது.
மீனாட்சி அம்மா ஜானுவைத் திட்டிட்டு, சாப்பிடாம எழுந்து போறாங்க.
வீட்டுக்கு நிம்மதி
வீட்டுக்கு நிம்மதி வேணும்னு மீனாட்சி அம்மா சித்தரை வீட்டுக்கு வரவச்சு பூஜை பண்ணனும்னு நினைக்கறாங்க.அதுக்கு முன்னால விரதம் இருக்கணும்னு ஆஷ்ரமத்துல சொல்லிடறாங்க. அதனால் சுத்த சைவமா 10 நாளைக்கு விரதம் இருக்கறாங்க. ஜானு பார்த்து பார்த்து சைவமா சமைச்சு வைக்கறா.
சாம்பாரில் மீன்
ஜானு சமைச்சு வச்சுட்டு அந்த பக்கம் போன உடனே, வீட்டில் மீனாட்சி அம்மாவுக்கு மறைமுக எதிரியா இருக்கும் மீனாட்சி அம்மாவின் நாத்தனார் சாம்பாரில் மீனை கொண்டு வந்து போட்டுட்டு போறாங்க. இப்போ சைவ சாப்பாடு அசைவம் ஆயிருச்சாம்.. ஜானுவின் மீது பழி வந்து சேருமாம்.
சீரியலைத் தவிர
சாப்பாட்டில் ஏதாவது கலப்பது என்பதெல்லாம் டிவி சீரியல் தவிர எதிலும் நடக்காதுங்க.இந்த குரூர புத்தியோட இன்னும் நம்ம மனுஷங்க யாரும் அத்தனை சுலபமா எதையும் செய்வது இல்லை. சாப்பாட்டை பசி தீர்க்கும் அமுதமாக மட்டுமே பார்த்து வருகிறார்கள்.
விரதம் சைவம்
வீட்டுக்கு நிம்மதி.. சித்தரை பார்க்கறது என்பது வரைக்கும் சரி. இதில் விரதம் வரைக்கும் கூட சரிதான். விரதம் இருக்கும்போது சைவ சமையல் சாப்பிட உட்காருகையில், அதில் மீனை பிடித்து போடுவது இதெல்லாம் ரொம்ப சிறு பிள்ளைத்தனமா இருக்கு. எப்போ மாத்துவீங்க?