ஜோடிக்காக ராஜா ராணியா இல்லை... ராஜா ராணிக்காக... ஜோடியா?
சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் மொத்தம் நாலு ஜோடி சிங்கப்பூர் போயிருக்காங்க. வினோதினி, ஹரீஷ் ரெண்டு பேர் ஹனிமூனுக்கு எல்லாரும் போயிருக்காங்க.
ஆனா, உண்மையா பார்க்கப் போனா செம்பாவுக்கும், கார்த்திக்குமான ஹனிமூன் போல இருக்கு. ராஜா ராணி சீரியலுக்காக இவங்க சிங்கப்பூர் போனாங்களா,இவங்களுக்காக விஜய் டிவி இதை ஏற்பாடு செய்தாங்களான்னு கேட்கற அளவு இருக்கு.
ஹரீஷ், வினோதினி ரெண்டு பேர் தவிர மீதி மூணு பெரும் ஒரு சேலஞ்ச் பண்ணிக்கறாங்க. அதாவது சிங்கப்பூரில் கணவன்மார்கள் யாரோ, மனைவிமார்கள் யாரோவாம்.
நிலாவோட ஒரிஜினல் அப்பாவை நீலாம்பரி காதலிச்சாங்களா?.. அப்ப கல்யாணம்....?
மனைவிமார்களை கண்வன்களே புதுசா பார்க்கற பொண்ணு மாதிரி பார்த்து, இம்ப்ரஸ் பண்ணனுமாம். அதுக்கு பிறகு ஐ லவ் யூ சொல்லணுமாம். சொல்ல வைக்கிறேன் பாருன்னு மூணு கணவன்மார்களும் சவால் விடறாங்க.
அதுக்காக ஒவ்வொருத்தரும் தன் பொண்டாட்டியை இம்ப்ரஸ் பண்ண முயற்சிக்கறாங்க. இவங்க எதை காமிச்சலும் பார்க்கறாங்கன்னு மக்களை முட்டாளாக்க நினைக்கறது கொஞ்சமும் நல்லாயில்லை.
இது என்ன சினிமாவா...நயன்தாராவுக்காக பார்க்கலாம்..கீர்த்தி சுரேஷுக்காக பார்க்கலாம்னு காம்பரமைஸ் பண்ணிக்க... இவங்க சிங்கப்பூரை சுத்தி பார்க்கப் போனதை. ஹனிமூனுக்கு போனதை மக்கள்பார்த்துக்கிட்டு இருக்கணுமா?
விவஸ்தையோட சிங்கப்பூர் பயணத்தை கொண்டு போக தெரியலையா கதை ஆசிரியருக்கு... நிஜமா வரவேற்பறைக்கே கதையை கொண்டு வரும் டிவியில் இப்படிப்பட்ட சீரியல்களை மக்கள் பார்க்கணும்னு திணிக்கறதை நினைச்சா வருத்தமா இருக்கு.