செல்லப் பிள்ளை கேபி.. சூடான போட்டோ.. சூப்பராக ரசிக்கும் ரசிகர்கள்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் செல்லப்பிள்ளையாக அந்த வீட்டை விட்டு வெளியே வந்த கேப்ரில்லா தன்னுடைய ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவை வெளியிட்டு இருக்கிறார் .
அதை பார்த்து அவருடைய ரசிகர்கள் ரசித்து ரசித்து கமெண்டுகளை போட்டு வருகிறார்கள் .இந்த போட்டோஸ்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
கேப்ரில்லா அறிமுகமானது என்னவோ திரைப்படங்களில் தான் அதுவும் தனுசுடன் நடித்திருக்கிறார் .இவர் 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் பிரண்டாக நடித்திருந்தார்.
3 தோழி
தோழியாக நடித்து இருந்தாலும் பருவ மங்கையாக தற்போது இவர் அனைவரின் மனதையும் கொள்ளை அடித்து இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு பிறகு படிப்பில் கவனத்தை செலுத்தி வந்தாலும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் தன்னுடைய கவனத்தையும் செலுத்தி வந்தார். அதனாலேயே இவருக்கு நாளுக்குநாள் ரசிகர்கள் வட்டாரம் பெருகி வந்தது.
பம்பர் பரிசு
இருந்தாலும் இவருக்கு ஒரு பம்பர் பரிசாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்று தெரிந்ததுமே இவருடைய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர் .இனி தினமும் இவருடைய தரிசனத்தை டிவியில் இரண்டு மணி நேரம் பார்க்கலாம் என்று ஆவலுடன் காத்திருந்தனர்.
கேபி மீம்ஸ்
அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு தகுந்த மாதிரிதான் கேப்ரில்லாவும் அந்த வீட்டிற்குள் நடந்து கொண்டார். அவருடைய ரசிகர்கள் இவரை தினமும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போட்டு கொண்டாடி வந்தனர். அதுமட்டுமல்லாமல் இவர் அன்பு டீமில் உறுப்பினராக மாறியதால் சில நெட்டிசன்கள் இவரை கலாய்த்து வந்தனர். இருந்தாலும் ரசிகர்களின் ஆதரவு இவருக்கு தொடர்ந்து இருந்து கொண்டிருந்தது.
நல்ல அறிவாளி
இவர் வயதில் இளையவராக இருந்தாலும் இந்த வீட்டிற்குள் அறிவுத் திறனுடன் ரம்யா பாண்டியனின் முகத்திரையை கிழித்து விட்டார் என்று இதற்காக இவருடைய ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். அது மட்டுமல்லாமல் தவறு என்று தெரிந்தால் உடனே சுட்டிக்காட்டும் தைரியமும் இவருக்கு இருக்கு என்று இவருக்காக பலரும் ஆதரவு தெரிவித்து வந்தனர்.
பணப்பெட்டியுடன் வெளியேறினார்
ஆனால் கடைசியில் இவர பணப் பெட்டியை தூக்கிக்கொண்டு இந்த வீட்டை விட்டு வெளியே வந்ததால் இவருடைய ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர் .இருந்தாலும் இந்த வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு மீண்டும் இவர் இன்ஸ்டாகிராமில் களைகட்டத் தொடங்கி விட்டார். அதனால் இவருடைய ரசிகர்கள் இவருக்காக இன்ஸ்டாகிராமில் காத்துக்கிடக்கின்றனர்.
அடிக்கடி இன்ஸ்டா போஸ்ட்
அதனால்தான் அடிக்கடி இவரின் போஸ்ட் காக பலர் இன்ஸ்டாகிராம் பக்கம் வந்து செல்கின்றனர் என்று கமெண்டுகளை போட்டிருக்கிறார்கள். தற்போது இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஊதா ஊதா ஊதாப்பூ என்று பாட்டுப்பாடி ரசிக்கும் ரசிகர்கள் இவருடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.
ரசிகர்கள் ஹேப்பி
தனிமையில் சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோவை கேப்ரில்லா வெளியிட்டதும் அதைப்பார்த்து பார்த்து ரசித்து அவருடைய ரசிகர்களும் கமெண்டுகளை கொட்டி வருகிறார்கள் .அதுவும் இவருடைய வெறித்தனமான ரசிகர்கள் ஹாட்டின் களை பறக்கவிட்டு கவிதைகளையும் பொழிகிறார்கள்.
கேபி ஆர்மி
இவருக்காக பல ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் ஃபேன்ஸ் பேஜ்களை ஓபன் பண்ணி ஆர்மி அமைத்தும் வருகிறார்கள் .நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இவர் சீக்கிரத்தில் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதுதான் இவருடைய ரசிகர்களின் ஆசையாம். அதற்கு முன்னோட்டமாக தான் கேப்ரில்லா போட்டோ ஷூட் நடத்தி அவர்களுடைய ரசிகர்களை என்ஜாய் படுத்தி வருகிறார்.