Naam Iruvar Namakku Iruvar Serial: இதோ.. இங்கனக்குள்ள ஒரு தங்கைக்கோர் கீதம்!
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் அண்ணன் முன்னால் தங்கையை சித்ரவதை செய்யும் தங்கைக்கோர் கீதம் காட்சிகள் ஆரம்பமாகி உள்ளது.
கார்த்திக் எதற்காக ஆனந்தியை கல்யாணம் செய்துக்க கூடாது என்று மாயன் நினைத்தானோ அது இன்று அவன் கண் முன்னால் நடந்து அவனை வெறுப்பேத்தி உள்ளது.
மாயன் நெட்டப்பு சொட்டப்பு என்று காமெடி செய்த காலம் போய் இப்போது தங்கை செண்டிமெண்ட் காட்சிகள் அரங்கேற துவங்கி உள்ளது,
500 வது எபிசோட்
விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் 500 வது எபிசோட் கொண்டாட்டங்கள் அண்மையில்தான் கொண்டாடி முடித்தார்கள். அப்படி வெற்றி நடை போட்டு வரும் அந்த சீரியலில் மாயன், அரவிந்த் என்று இரட்டை வேடத்தில் நடித்து அனைவர் மனதையும் கொள்ளை கொண்டுள்ளார் நடிகர் செந்தில்.
வித்தியாசம் காண்பித்து
இரட்டை வேடத்துக்கு நன்றாக வித்தியாசம் காண்பித்து சின்னத் திரைக்கு மிக அருமையாக நடித்து தனது வேடத்தை வித்தியாசப்படுத்தி காண்பித்து இருக்கார் செந்தில். இதற்காக இவரை பாராட்டலாம்.. இவர் பேசும் மதுரை தமிழ் கூட மிகவும் அழகு, இனிமை.
கண்ணுக்கு அழகு
சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட் கண்ணுக்கு அழகான இடங்களாக இருக்கிறது. நன்றாக மெனக்கெட்டு படமாக்கி இருக்கிறார்கள். எந்த இடத்திலும் மதுரைத் தமிழ் மிஸ் ஆகாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆரம்பத்தில் காதல், கல்யாணம் என்று போன கதையில் இப்போது அண்ணண் தங்கை சென்டிமென்ட் காட்சிகள் பிடம்பிடித்து இருக்கின்றது.
சென்ட்மென்ட் மாயன்
மாயனின் தங்கை ஆனந்தி கண் முன்னால் கார்த்திக்கால் கணவன் கொடுமைக்கு ஆளானதையும், மாயன் தங்கைக்காக கண்ணீர் வடிப்பதையும் தங்கைக்கோர் கீதம் போல சென்ட்டிமென்ட் காட்சிகளாக்கி இருக்கிறார்கள். மாயனுக்கு இப்போது சென்ட்டிமென்ட் காலம் போலும்! இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.