ஆனந்தி ஜெயிச்சுகிட்டே இருக்காளே... மாயமா.. மந்திரமா!
சென்னை:சன் டிவியின் நாயகி சீரியலில் கதாநாயகி எப்போதும் ஜெயிக்கும் காட்சியாகவே காண்பிக்கறாங்க.
சீரியல்களில் ஹீரோயின் எப்போதும் தோத்து தோத்ததுதான் போவாங்க.. சீரியல் முடியும் பாருங்க..அப்போதுதான் சீரியலில் கதாநாயகி ஜெயிப்பாங்க..
கதாநாயகிகள் சீரியல்களில் தோற்றுப்போகும் விஷயம்தான் இருக்கும். இது அதிகமாக அரங்கேறியது கோலங்கள் சீரியலில்தான்.அதுல அபியாக நடிக்கும் தேவயானிக்கு தோற்று போவதும், கண்ணீர் விடுவதும்தான் வேலை.
இப்போ நாயகி சீரியலில் ஆனந்தி, அபிநயா, மாமனார், மாமனாரின் பார்ட்னர்னு எல்லார் போடும் திட்டங்களையும் முறியடிச்சுட்டு, ஜெயிச்சுகிட்டே இருக்காங்க.
உண்மையில் இது போல வித்தியாசமான கதைகளைத்தான் மக்கள் ரசிச்சு பார்க்கறாங்க. ஆரம்பத்தில் இருந்து ஆனந்தி ஜெயிச்சுகிட்டே இருக்கா.
பாவம் ஆனந்தியின் தோழி கண்மணிதான் தோத்துகிட்டே இருக்கா.சில சமயம் இவளும் தந்திரமா சதிகளை முறியடிக்கறா. குறிப்பா புருஷன் கம்பெனிக்கு பிரியாணி சமைச்சு தர சொல்லி கேட்க,கண்மணியும் ஆர்வமா செய்து, டேபிளில் வைக்கறா.
அந்த நேரம் பார்த்து அதை கெடுக்க சுகாசினி மிளகாய் தூள்,உப்பு எல்லாத்தையும் அள்ளி கொட்டிட்டறா. மாலை என்ன நடக்கும்னு பார்க்கலாம்னு சுகாசினி காத்திருக்க,மாலை மகிழ்ச்சியுடன் வர்றான் செழியன்.
விட்ட இடத்தை பிடிக்கப் போறாராமே ராதிகா... பேஷ் பேஷ்!
பார்த்தால் இவள் இப்படி செய்வா..அதை வீடியோ எடுத்து அத்தைகிட்ட காமிக்கணும்னுதான்ன்னு சொல்லி,வேற சாதம் தயார் பண்ணி வச்சிருந்தேண்டின்னு சொல்றா கண்மணி.
இது போன்ற காட்சிகள் நிஜமா சீரியல் விரும்பிகளுக்கு பிடிக்குது.ஏதோ நாமே ஜெயிச்சுட்ட மாதிரி ஃபீல் பண்றாங்க.